1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – இன்று பள்ளிகள் திறப்பு!
கொரோனா தொற்று நோயை தடுக்கும் விதமாக அறிவிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை பின்பற்றி கேரளா மாநிலத்தில் இன்று (ஜூன் 1) முதல் பள்ளிகள் அனைத்தும் முழுமையாக திறக்கப்பட்டுள்ளன. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.
பள்ளிகள் திறப்பு:
கேரளா மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று (ஜூன் 1) முதல் புதிய கல்வியாண்டுக்கான வகுப்புகள் துவங்கி இருக்கிறது. அந்த வகையில் பள்ளிகளை திறப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது தயார் நிலையில் இருப்பதாகவும், இன்று முதல் புதிய கல்வியாண்டு தொடங்கும் போது 4 லட்சம் புதிய மாணவர்கள் முதலாம் வகுப்பில் சேர்க்கப்படுவார்கள் என்று கல்வி அமைச்சர் வி.சிவன்குட்டி தெரிவித்துள்ளார். இதற்கிடையில் கொரோனா தொற்றுநோயால் ஏற்பட்ட இரண்டு ஆண்டு கால இடைவெளிக்கு பிறகு பள்ளிகள் முழுமையாக திறக்கப்படும் போது 42.9 லட்சம் மாணவர்களும், 1.8 லட்சம் ஆசிரியர்களும் பள்ளிகளுக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
LPG சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.135 குறைவு – வணிகர்கள் நிம்மதி!
இப்போது பள்ளிக்கு வரும் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் அனைவரும் முகக்கவசம் அணிவதை அரசு கட்டாயமாக்கியுள்ளது. தொடர்ந்து பள்ளிகள் திறப்பு குறித்து கல்வி அமைச்சர் சிவன்குட்டி கூறுகையில், ‘பள்ளி மாணவர்களுக்கு முதல் தவணைக்கான சீருடை மற்றும் பாடப்புத்தகங்கள் விநியோகம் நிறைவடைந்துள்ளது. இந்த கல்வியாண்டில் பல்வேறு பள்ளிகளில் பிஎஸ்சி மூலம் நியமனம் பெற்ற 353 புதிய ஆசிரியர்கள் பணியில் சேர உள்ளனர். அனைத்து பள்ளிகளுக்கும் முன்பாக போலீசார் போதிய பாதுகாப்பை வழங்குவார்கள். மேலும் பள்ளி வாகனங்களை நிறுத்துவதற்கு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.
Exams Daily Mobile App Download
பள்ளிகளுக்கு குழந்தைகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களை கண்காணிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதனால் பள்ளி வாகனங்களில் மாணவர்களை அதிக அளவில் ஏற்றிச் செல்வது அனுமதிக்கப்படாது’ என்று தெரிவித்துள்ளார். மேலும், அனைத்து வாகனங்களுக்கும் உடற்தகுதி சான்றிதழை உறுதி செய்யுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இப்போது மாநிலம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் குறைந்தாலும், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தொடர வேண்டும் என்றும் காய்ச்சல் அறிகுறி உள்ள குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.