செப்டம்பர் 6ம் தேதி வரை பள்ளிகளை திறக்க தடை – 40 குழந்தைகள் உயிரிழப்பு எதிரொலி!
உத்திரப் பிரதேசத்தில் டெங்கு காய்ச்சலின் காரணமாக 40 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். அதனை தொடர்ந்து செப்டம்பர் 6ம் தேதி வரை பள்ளிகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள் திறக்க தடை:
கொரோனா பாதிப்பின் காரணமாக நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருந்தது. நோய் பரவல் தாக்கத்தின் அடிப்படையில் பள்ளிகளை திறப்பது குறித்து மாநில அரசு முடிவெடுக்க அதிகாரம் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து தமிழகத்தில் இன்று முதல் பள்ளிகள் திறக்கப்படுகிறது. சில மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு திரும்பவும் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது. உத்திர பிரதேச மாநிலத்தில் ஆகஸ்ட் 16 ஆம் தேதி பள்ளிகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது.
SBI கவாச் லோன் : ரூ.5 லட்சம் வரை பெறலாம், 3 மாதங்களுக்கு EMI விலக்கு! முழு விபரம் இதோ!
அதனை தொடர்ந்து 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் அந்நாள் முதல் நடத்தப்பட்டு வந்தது. இதனை தொடர்ந்து இன்று 6 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கிடையே கடந்த வாரத்தில் உத்தரபிரதேசத்தின் பைரோசாபாத் மாவட்ட ஆஸ்பத்திரியில் 40க்கும் மேற்பட்ட குழந்தைகள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பலியாகியுள்ளனர்.
TN Job “FB Group” Join Now
இதை அறிந்து முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று முன்தினம் மருத்துவமனையை ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து ஒரு குழு அமைத்தது மாணவர்களின் மரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளவும், பாதிப்பினை கட்டுப்படுத்தவும் உத்தரவிட்டுள்ளார். தற்போது டெங்கு காய்ச்சலின் காரணமாக மாணவர்கள் அதிகம் பலியாகி இருப்பதனால் பைரோசாபாத் மாவட்டத்தில் செப்டம்பர் 6ம் தேதி வரை பள்ளிகளை திறக்க தடை விதித்து மாவட்ட நீதிபதி சந்திர விஜய் சிங் உத்தரவிட்டு உள்ளார்.