1 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு ஜனவரி முதல் பள்ளிகள் முழுமையாக திறப்பு – கல்வித்துறை திட்டவட்டம்!

0
1 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு ஜனவரி முதல் பள்ளிகள் முழுமையாக திறப்பு - கல்வித்துறை திட்டவட்டம்!
1 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு ஜனவரி முதல் பள்ளிகள் முழுமையாக திறப்பு – கல்வித்துறை திட்டவட்டம்!

மேற்கு வங்க மாநிலத்தில் வரும் ஜனவரி மாதம் 1 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் அனைத்து கோவிட்-19 விதிமுறைகளையும் பின்பற்றி முழுமையாக திறக்கப்படும் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது.

பள்ளிகள் திறப்பு:

கொரோனா தொற்றின் முதல் மற்றும் இரண்டாம் அலை பரவல் காரணமாக கடந்த கல்வி ஆண்டு முதல் நாடு முழுவதும் உள்ள கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டது. கொரோனா பரவல் குறைந்த பிறகு, நாடு முழுவதும் பள்ளிகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. நவம்பர் 7 ஆம் தேதி மேற்கு வங்கம் முழுவதும் உள்ள பள்ளிகளில் வகுப்புகள் ஓரளவுக்கு மீண்டும் தொடங்கப்பட்டது. நவம்பரில் பள்ளிகள் திறக்கப்பட்டதும் வகுப்புகள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஆகிய இரண்டிலும் நடத்தப்படுகின்றது.

TNPSC குரூப் 4 VAO 5,255 காலிப்பணியிடங்களுக்கான முக்கிய தகவல் – தேர்வர்கள் கவனத்திற்கு!

இந்நிலையில், மேற்கு வங்க கல்வித் துறையின் கூற்றுப்படி ஜனவரி முதல் 1 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் அனைத்து கோவிட்-19 விதிமுறைகளையும் பின்பற்றி முழுமையாக திறக்கப்படும். பள்ளிகள் தொடங்கிய பின் மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு அழைக்க சிறப்பு திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பள்ளிகள் மூடப்பட்டதால், பல மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளைப் பின்பற்ற முடியவில்லை. இதனால், பள்ளி பாடத்திட்டத்தில் பின்தங்கியுள்ளனர். தற்போது மாணவர்கள் முந்தைய பாடத்திட்டத்தை அடையும் வகையில் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றது. பள்ளிகள் செயல்படத் தொடங்கியவுடன் பாடத்திட்டத்தை முடிப்பதில் எந்த பிரச்சினையும் இருக்காது என்று பாடத்திட்டக் குழு உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.

தமிழகத்தில் ஜன.5 முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆரம்பம் – சபாநாயகர் அறிவிப்பு!

மாநில பாடத்திட்டக் குழு, அனைத்து பாடத்திட்டங்களையும் ஒருங்கிணைத்து இரண்டு புத்தகங்களாகப் பிரித்து மாணவர்களுக்குப் பகுதிகளாகக் கற்பிக்கும் பணியை ஏற்கனவே முடித்துள்ளது. மேலும் இதன்படி, எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் 100 நாட்கள் ஆறாம் மற்றும் ஏழாம் வகுப்பு பாடத்திட்டத்தில் இருந்து கற்பிக்கப்படும். இது முடிந்ததும், தற்போதைய பாடத்திட்டம் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒரு வருடத்திற்குள் இவ்வளவு விஷயங்களையும் கற்பிக்க முடியுமா என்று மக்கள் கேள்வி எழுப்பினார்கள். ஆனால் கல்வித்துறை ஊரடங்கின் போது அனைத்து வகுப்புகளின் பாடத்திட்டங்களும் நிறைய குறைக்கப்பட்டுள்ளன. எனவே அதை முடிப்பது ஒரு பிரச்சனையாக இருக்காது என்று தெரிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!