கொரோனா தொற்று அதிகமானால் பள்ளி, கல்லூரிகள் மூடல் – அமைச்சர் தகவல்!

0
கொரோனா தொற்று அதிகமானால் பள்ளி, கல்லூரிகள் மூடல் - அமைச்சர் தகவல்!
கொரோனா தொற்று அதிகமானால் பள்ளி, கல்லூரிகள் மூடல் - அமைச்சர் தகவல்!
கொரோனா தொற்று அதிகமானால் பள்ளி, கல்லூரிகள் மூடல் – அமைச்சர் தகவல்!

கர்நாடகா மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு கல்வி நிலையங்கள் மூடப்படும் என்று மாநில அமைச்சர் நாகேஷ் அறிவித்துள்ளார்.

தொற்று பரவல்:

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வந்த காரணத்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து மாநில கல்வி நிலையங்களும் முன்னதாக மூடப்பட்டது. பின்னர், அறிவிக்கப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகளின் விளைவினால் நோய் பரவல் குறைந்து, பாதிப்பு குறைய தொடங்கியது. இதனால் மீண்டும் மெல்ல இயல்பு நிலை திரும்ப தொடங்கியது. இதனால் பாதிப்பு நிலவரங்களுக்கு ஏற்ப ஒவ்வொரு மாநிலங்களிலும் கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வந்தது. நிலைமை சீரடைந்த மாநிலங்களில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பள்ளி, கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாளை மறுநாள் (டிச.9) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

இந்நிலையில், கர்நாடகா மாநிலத்திலும் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளும் உரிய கொரோனா நோய் தடுப்பு விதிமுறைகளுடன் செயல்பட்டு வருகிறது. ஆனால் புதிய வகை மாறுபாடு அடைந்த ஓமைக்ரான் தொற்று வகை கர்நாடகா மாநிலத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா பரவல் மாநிலம் முழுவதும் சற்று அதிகரித்து வருகிறது. இதனால் நேரடி வகுப்புகளில் கலந்து கொள்ளும் மாணவர்களின் பெற்றோர்கள் முழுமையாக இரண்டு டோஸ் தடுப்பூசிகளை செலுத்தி, அதன் சான்றிதழை பள்ளியில் அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

RRB Group D இலவச மாதிரித் தேர்வு – தேர்வு எழுத உள்ளோர் கவனத்திற்கு!

தடுப்பூசி செலுத்தாத பெற்றோர்களின் மாணவர்கள் பள்ளி, கல்லூரிக்கு வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரியில் நேரடி வகுப்பிற்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை வெறும் 20% ஆக குறைந்துள்ளது. பள்ளிக்கு வராத மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மேற்கொள்ளப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆசிரியர்கள் ஆன்லைன் மற்றும் ஆப்லைன் வகுப்புகளை மேற்கோளா வேண்டிய சூழல் இருப்பதால் ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது, ஆனால் நோய் பரவல் விகிதம் அதிகரிக்கும் பட்சத்தில் மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளும் மூடப்படும் என்று மாநில அமைச்சர் நாகேஷ் முன்னதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!