ஜூலை 18 வரை பள்ளி & கல்லூரிகள் மூடல் – கனமழை எதிரொலி!
நாடு முழுவதும் பல மாநிலங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. அந்த வகையில் தெலுங்கானா மாநிலத்தில் கனமழை பெய்து வருவதால் ஜூலை 18 ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
விடுமுறை அறிவிப்பு:
தெலுங்கானா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக அதிகமான கனமழை பெய்து வருகிறது. அதனால் முக்கிய சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. அதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அதனால் தொடர் மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக மாநிலத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் (அரசு, உதவி பெறும் மற்றும் தனியார்) 14.7.2022 முதல் 16.7.2022 வரை விடுமுறை விடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
Exams Daily Mobile App Download
இந்நிலையில் தற்போது வெளியான அறிவிப்பின் படி பள்ளி மற்றும் கல்லூரிகள் வருகிற ஜூலை 18 ஆம் தேதி திங்கட்கிழமை முதல் வழக்கம் போல செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் பல பகுதிகளில் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்பதால் கல்வி நிறுவனங்களை மூட அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆதார் அலுவலகத்தில் எக்கச்சக்க காலி பணியிடங்கள் – விண்ணப்பங்கள் வரவேற்பு!
மேலும் தெலுங்கானாவில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதனால் தற்போது மேலும் சில நாட்கள் கல்வி நிறுவனங்கள் மூடுவது குறித்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தெலுங்கானாவில் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அதன்படி பல பகுதிகளில் பள்ளிகள் மூடப்பட இருப்பதாக அறிவிப்பு வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.