ஏப்ரல் 30ம் தேதி வரை பள்ளிகள் மூடல் – மாநில அரசு அறிவிப்பு!!

1
ஏப்ரல் 30ம் தேதி வரை பள்ளிகள் மூடல் - மாநில அரசு அறிவிப்பு!!
ஏப்ரல் 30ம் தேதி வரை பள்ளிகள் மூடல் - மாநில அரசு அறிவிப்பு!!
ஏப்ரல் 30ம் தேதி வரை பள்ளிகள் மூடல் – மாநில அரசு அறிவிப்பு!!

கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து வரும் நிலையில் 9 முதல் 12ம் வகுப்பு வரையில் பயிலும் மாணவர்களுக்கு ஏப்ரல் 30ம் தேதி வரை பள்ளிகள் மூடப்படும் என மாநில அரசு சார்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பள்ளிகள் மூடல்:

நாடு முழுவதும் கொரோனா 2வது அலை அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு ஏற்கனவே CBSE, ICSE பாடத்திட்ட பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு உள்ளன. மேலும் பள்ளி, கல்லூரிகள் உட்பட கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டு வருகிறது. இதற்கிடையில் மாநிலத்தில் அதிகரித்து வரும் கொரோனா நோய்த்தொற்று காரணமாக ஏப்ரல் 30 வரை 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஹரியானாவில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் பள்ளிகள் மூடப்படுவதாக மாநில கல்வி அமைச்சர் கன்வர் பால் குஜ்ஜார் அறிவித்துள்ளார்.

TN Job “FB  Group” Join Now

அங்கு ஏற்கனவே 1 முதல் 8 வகுப்புகளுக்கான பள்ளிகள் மூடப்பட்டு உள்ளது. அம்மாநில கல்வி அமைச்சர் கூறுகையில், “அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு காரணமாக, 9 முதல் 12 வகுப்புகளுக்கான பள்ளிகளும் ஏப்ரல் 30 வரை மூடப்படும். முதல் முதல் எட்டாம் வகுப்பு வரையிலான பள்ளிகள் ஏற்கனவே ஏப்ரல் 30 வரை மூடப்பட்டுள்ளன”.

ICSE 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பு – அதிகாரபூர்வ அறிவிப்பு!!

கொரோனா அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு ஹரியானா அரசு ஆரம்ப மற்றும் இடைநிலைப் பள்ளிகளை (1 முதல் 8 வகுப்புகள்) மூடியுள்ளது. ஹரியானாவின் பள்ளி கல்வி வாரியம் (பி.எஸ்.இ.எச்) 10 ஆம் வகுப்பு வாரிய தேர்வுகளையும் ரத்து செய்துள்ளது. உள் மதிப்பீட்டின் அடிப்படையில் மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படும். மேலும் 12 ஆம் வகுப்பு வாரிய தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!