தமிழகத்தில் கொரோனா பரவலால் மீண்டும் பள்ளிகள் மூடல்? அரசு திடீர் அறிவிப்பு!
கொரோனா பரவல் தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வருவதால் பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவே பயப்படுகின்றனர். இந்நிலையில் மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு விரைவில் பள்ளிகளை மூட வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
பள்ளிகள் மூடல்:
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே கொரோனா பரவலினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அதிலும் குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கோவை ஆகிய மாவட்டங்களில் தான் தினமும் கொரோனா பரவலின் வீதம் அதிகரித்து வருகிறது. இதனால், கண்டிப்பாக பொது இடங்களில் மாஸ்க் அணியும்படி வலியுறுத்தப்பட்டு வருகிறது. அதனை, மீறுபவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது. தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்று 2,500யும் தாண்டியுள்ளது. இதில் சென்னையில் மட்டுமே 1000 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Exams Daily Mobile App Download
தமிழகத்தில் இப்படி கொரோனா வேகமெடுத்துக் கொண்டிருக்கும் வேளையில் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதாவது, மாணவர்கள் பள்ளிக்கு மாஸ்க் அணிந்து வந்தாலும் கூட கொரோனா பரவிவிடுமோ என்கிற அச்சம் நிலவி வருகிறது. இதனையடுத்து, கடந்த வாரத்தில் மட்டுமே தேனியில் உள்ள ஒரே பள்ளியில் 31 மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த பள்ளியை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழக பொது மக்களுக்கான முக்கிய அறிவுறுத்தல் – முதல்வர் வெளியிட்ட பதிவு!
மேலும், பள்ளியில் மாணவர்களுக்கு காய்ச்சல், இருமல் முதலிய ஏதேனும் சிறிய அறிகுறிகள் இருந்தாலும் கூட உடனடியாக பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு மாணவனுக்கு கொரோனா பரவலினாலும் அனைத்து மாணவர்களும் பாதிக்கப்படக்கூடும். இதனால், பெற்றோர்கள் மிகவும் பயந்தபடியே தான் இருக்கின்றனர். மேலும், கொரோனா தொற்று குறையும் வரைக்கும் மீண்டும் ஆன்லைன் வகுப்பு நடத்தும்படி பெற்றோர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும், கொரோனா பரவும் வேகத்தை பார்த்தால் பள்ளிகள் மீண்டும் மூடவேண்டிய சூழல் வருமோ எனவும் பேச்சுவார்த்தை எடுபட்டு வருகிறது.