1 முதல் 9ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – இன்று முதல் அரை நாள் மட்டுமே பள்ளிகள் திறப்பு!
மாநிலத்தில் தற்போது நிலவிக் கொண்டிருக்கும் கோடை வெப்பத்தை கருத்தில் கொண்டு இன்று (ஏப்ரல்.4) முதல் 1 லிருந்து 9ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு அரை நாள் மட்டுமே வகுப்புகளை நடத்த ஆந்திர பிரதேச அரசு முடிவு செய்துள்ளது.
பள்ளிகள் திறப்பு
நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்று சூழல் கட்டுக்குள் வந்திருக்கும் நிலையில், கொரோனா பரவலை முன்னிட்டு விதிக்கப்பட்ட அனைத்து கட்டுப்பாடுகளும் திரும்ப பெறப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனிடையே ஆந்திர பிரதேச மாநிலத்தில் கொரோனாவால் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளில் இருந்து தளர்வுகளை அளித்துள்ள அரசு பள்ளிகளை வழக்கம் போல நேரடி முறையில் செயல்பட அனுமதித்துள்ளது. இதற்கிடையில் அம்மாநிலத்தில் 1 முதல் 9ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு அரை நாள் மட்டுமே வகுப்புகளை நடத்த அரசு முடிவு செய்திருக்கிறது.
TN Job “FB Group” Join Now
அதாவது, ஆந்திர பிரதேச மாநிலத்தில் தற்போது நிலவிக் கொண்டிருக்கும் கோடை வெப்பத்தை கருத்தில் கொண்டு இன்று (ஏப்ரல்.4) முதல் 1 லிருந்து 9ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு அரை நாள் மட்டுமே வகுப்புகளை நடத்த ஆந்திர பிரதேச அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வி ஆணையர் எஸ் சுரேஷ்குமார் நேற்று (ஏப்ரல்.3) வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 9ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு தினசரி காலை 07.30 மணி முதல் 11.30 மணி வரை அரை நாள் மட்டும் வகுப்புகள் நடைபெறும்.
தியேட்டரில் வெளியாகும் எழில் படம், வருத்தப்படும் கோபி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!
அதைத் தொடர்ந்து மதிய உணவுக்கான இடைவெளி விடப்படும். இப்போது ஏப்ரல் 27 முதல் நடத்த திட்டமிடப்பட்ட எஸ்எஸ்சி தேர்வுகளைக் கருத்தில் கொண்டு, 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகள் வழக்கம் போல் முன்பு பரிந்துரைக்கப்பட்ட கூடுதல் படிப்பு நேரங்களில் தொடரும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கிடையில் பள்ளி நேரத்தை மாற்றுவதற்கு தேவையான நடவடிக்கையை எடுக்க, மாநிலத்தில் உள்ள அனைத்து மண்டல பள்ளிக்கல்வி இணை இயக்குனர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.