மாநிலத்தில் ஏப்ரல் 30 வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – அரசு உத்தரவு!
தமிழகம், ஒடிசா, மகாராஷ்டிரா, தலைநகர் டெல்லி, உள்ளிட்ட பல மாநிலங்களில் வெப்பச்சலனம் அதிகமாக இருந்து வருகிறது. இதனால் ஒடிசா மாநிலத்தில் ஏப்ரல் 26 முதல் 30-ஆம் தேதி வரை அந்த மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளையும் மூட அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
பள்ளிகளுக்கு விடுமுறை
எப்போதும் கோடை காலம் ஆரம்பிப்பதற்கு முன்பே மார்ச், ஏப்ரல் மாதங்களில் எல்லாம் மாணவர்களுக்கு தேர்வு முடிந்து விடுமுறை விடப்பட்டிருக்கும். ஆனால், 2 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தான் பள்ளி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு அதிகமாக விடுமுறை விடப்பட்டதால் சனிக்கிழமைகளில் கூட பள்ளி வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டன. இதனால் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது.
1 முதல் 9ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்வின்றி தேர்ச்சி – கல்வித்துறை அறிவிப்பு!
பெரும்பாலும் மார்ச், ஏப்ரல் மாதம் தான் முழுக்க வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். கடந்த சில ஆண்டுகளை விட இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் சற்று கூடுதலாகவே இருக்கிறது. கூடுதல் வெப்பத்தினால் அவ்வப்போது பல மாநிலங்களில் மழைப்பொழிவு இருந்தது. தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மழைப்பொழிவு இருந்து வந்த நிலையில் தற்போது வழக்கத்திற்கு மாறாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது.
Exams Daily Mobile App Download
மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு ரெடியாகி வருகின்றனர். இந்த ஆண்டு மே மாதத்தின் இறுதி வரை மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து தலைநகர் டெல்லி, தமிழகம், ஒடிசா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இதனால் வெப்பத்தின் காரணமாக தோல் வியாதிகள் வருகின்றன. மாணவர்களின் நலன்களை கருத்தில் கொண்டு ஏப்ரல் 26 முதல் 30 ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு அங்கு உள்ள அனைத்து அரசு பள்ளிகளையும் மூட அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்பே திட்டமிடப்பட்ட தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.