நாடு முழுவதும் நாளை (ஏப்ரல் 4) பள்ளிகளுக்கு விடுமுறை – அரசு உத்தரவு!
நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அதனால் பல்வேறு தொழில்கள் பாதிக்கப்பட்டு அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டது. தற்போது இலங்கையில் இன்னும் பொருளாதார நெருக்கடி நிலை நிலவி வருகிறது. அதனால் இலங்கையின் அதிபர் அவசர நிலையை பிரகடனபடுத்தியுள்ளார். இதனால் இலங்கையில் அசாதாரணமான சூழல் நிலவி வருகிறது.
அவசர நிலை பிரகடனம்
இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனால் பல்வேறு தொழில்கள் பாதிக்கப்பட்டு அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டது. தற்போது கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இப்போது அனைத்து துறைகளும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளன. அத்துடன் அரசின் நிதி நிலைமை ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளது. ஆனால் இலங்கையில் கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் இலங்கையில் சுற்றுலா, தேயிலை உற்பத்தி மற்றும் ஆடை தயாரிப்பு உள்ளிட்ட தொழில்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளது.
தமிழகத்தில் 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு இறுதி தேர்வு ரத்து? பள்ளிக்கல்வித்துறை விளக்கம்!
அதனால் இன்னும் இலங்கையில் பொருளாதார நெருக்கடி நிலவு வருகிறது. அதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. மேலும் பெட்ரோல், டீசல் விலையும் வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளது. அத்துடன் பல மணி நேரம் இங்கு மின்வெட்டு ஏற்படுகிறது. இலங்கையில் ஏற்பட்டுள்ள இந்த பொருளாதார நெருக்கடிக்கு அதிபர் கோத்தபய ராஜபக்சே பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். அத்துடன் பல்வேறு இடங்களில் போராட்டங்களும் நடைபெற்று வருகிறது.
அதனால் இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே அவசர நிலையை அமல்படுத்தியுள்ளார். அதன்படி இங்கு கடந்த 2ம் தேதி மாலை 6 மணி முதல் திங்கள் கிழமை காலை 6 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் போராட்டங்கள் ஏற்படுவதை தடுக்க பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் மற்றும் யூ-டியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களும் முடக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது பள்ளிகளை நாளை முதல் மூட வேண்டும் என்று இலங்கை கல்வி அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி வடக்கு, தெற்கு, வடமேற்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள பள்ளிகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது