தமிழகத்தில் பிப்.1 முதல் பள்ளிகளுக்கு மீண்டும் விடுமுறை – பொதுமக்கள் கோரிக்கை!

0
தமிழகத்தில் பிப்.1 முதல் பள்ளிகளுக்கு மீண்டும் விடுமுறை - பொதுமக்கள் கோரிக்கை!
தமிழகத்தில் பிப்.1 முதல் பள்ளிகளுக்கு மீண்டும் விடுமுறை - பொதுமக்கள் கோரிக்கை!
தமிழகத்தில் பிப்.1 முதல் பள்ளிகளுக்கு மீண்டும் விடுமுறை – பொதுமக்கள் கோரிக்கை!

தமிழகத்தில் பிப்ரவரி 1 முதல் பள்ளி கல்லூரிகள் திறக்க வேண்டும் என நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு அளித்துள்ளார். இந்த அறிவிப்புக்கு பொதுமக்கள் பல்வேறு கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பள்ளிகளுக்கு மீண்டும் விடுமுறை:

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் சற்று குறைந்த பிறகு இயல்பு நிலைக்கு அனைத்து நிறுவனங்களும் நிரப்பின. மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கின. இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவிலிருந்து ஓமைக்ரான் என்ற புதிய வகை வைரஸ் பரவ தொடங்கியது. இந்த நிலையில் கொரோனா மூன்றாம் அலையின் தாக்கம் காரணமாக மாணவர்களின் நலன் அடிப்படையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ஜனவரி 31 வரை விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. மேலும் இரவு ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு ஜனவரி முதல் வாரத்தில் இருந்து அமலில் இருந்தது.

ஆதார் கார்டுதாரர்கள் கவனத்திற்கு – PVC அட்டை பெற ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

இந்த வகையில் கொரோனா இரண்டு தவணை தடுப்பூசி போடும் முகாம்கள் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் 15 வயது முதல் 18 வயது வரை உள்ள சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதல்வர் உத்தரவின் படி அமலில் உள்ள ஊரடங்கு முடிவடைய 4 நாட்கள் இருந்த நிலையில் பள்ளி கல்லூரிகள் திறப்பு, ஊரடங்கில் தளர்வு ஏற்படுமா? என்பது குறித்து நேற்று முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் பிப்.1 முதல் பள்ளிகளில் மீண்டும் சுழற்சி முறை வகுப்புகள்? அமைச்சர் விளக்கம்!

இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு பள்ளி கல்லூரிகள் பிப்ரவரி 1 முதல் திறக்கப்படும் மற்றும் இரவு ஊரடங்குகள், வார இறுதி நாள் முழு ஊரடங்கு இன்று முதல் இருக்காது என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்புக்கு மக்கள் பல்வேறு கருத்துக்களை கூறி வருகின்றனர். தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் சில வாரங்களில் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் காரணமாக தான் ஊரடங்கில் தளர்வு மற்றும் பள்ளி கல்லூரிகள் திறப்பு ஆகிய அறிவிப்புகள் வெளியாகி உள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர். தமிழகத்தில் தினசரி தொற்று 20 ஆயிரத்திற்கு மேல் உறுதி செய்யப்பட்டு வருகின்றன. இருப்பினும் எந்த வகையில் பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன என்று மக்கள் கேள்வி கேட்கின்றனர். எனவே பிப்ரவரி 1 முதல் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!