மார்ச் மாதம் முதல் பள்ளிகள் & பல்கலைக்கழகங்கள் மீண்டும் திறப்பு – அரசு அனுமதி!

0
மார்ச் மாதம் முதல் பள்ளிகள் & பல்கலைக்கழகங்கள் மீண்டும் திறப்பு - அரசு அனுமதி!
மார்ச் மாதம் முதல் பள்ளிகள் & பல்கலைக்கழகங்கள் மீண்டும் திறப்பு - அரசு அனுமதி!
மார்ச் மாதம் முதல் பள்ளிகள் & பல்கலைக்கழகங்கள் மீண்டும் திறப்பு – அரசு அனுமதி!

ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் பொதுப் பல்கலைக்கழகங்கள் வரும் மார்ச் மாதத்தில் மீண்டும் திறக்கப்பட இருப்பதாக தலிபான் கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.

பள்ளிகள் திறப்பு

ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான்கள் ஆட்சியமைத்த பிறகு நிலவி வந்த பதட்டமான சூழ்நிலை தற்போது மாறி மீண்டுமாக இயல்பு நிலைக்கு திரும்பி இருக்கிறது. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆப்கானிஸ்தான் அரசுக்கும் தலிபான்களுக்கும் இடையில் நடைபெற்ற போர், கடந்த ஆண்டின் துவக்கத்தில் முடிவுக்கு வந்த நிலையில், தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். இதனை தொடர்ந்து அந்நாட்டில் ஏற்பட்டிருந்த பதட்டமான சூழ்நிலை எல்லாம் மறைந்து தற்போது தான் வழக்கமான சூழல் நிலவி வருகிறது. இதற்கிடையில் வரும் மார்ச் மாதத்தில் பெண்கள் மற்றும் ஆண்களுக்கான பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மீண்டும் திறக்கப்படும் என்று தலிபான் அரசு அறிவித்திருக்கிறது.

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து? தேர்வின்றி தேர்ச்சி? அரசுக்கு முக்கிய கோரிக்கை!

இது தொடர்பாக தகவல் மற்றும் கலாச்சார துணை அமைச்சரும், ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய எமிரேட்டின் செய்தித் தொடர்பாளருமான ஜபியுல்லா முஜாஹித் கூறுகையில், அனைத்து மாணவர்களுக்கும் கல்வி எதிரானது அல்ல. ஆனால் பள்ளிகளில் சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் முற்றிலும் பிரிக்கப்பட வேண்டும். அதனால் இன்னும் இரண்டு மாதங்களில் உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் பொதுப் பல்கலைக்கழகங்களை மீண்டும் திறக்க கல்வி அமைச்சும் உயர்கல்வி அமைச்சும் கடுமையாக உழைத்து வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

இப்போது ஆப்கானிஸ்தானின் பெரும்பாலான மாகாணங்களில் உயர்தரப் பாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாகவும் சில மாகாணங்களில் பொருளாதாரப் பிரச்சினைகள் காரணமாக இன்னும் மூடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் சிறுமிகள் மற்றும் சிறுவர்கள் வகுப்பறைகளில் பிரிக்கப்படுவார்கள் என்றும், ஆப்கானிஸ்தானைச் சுற்றி பெண்களுக்கு அதிக விடுதிகள் கட்டுவதற்கு உழைத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக ஆப்கானிஸ்தான் முழுவதும் 150 பொதுப் பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டு தற்போது ஆறு மாதங்கள் கடந்துள்ளன.

ஜன.25ம் தேதி வரை நாடு தழுவிய முழு ஊரடங்கு அமல் – பிரதமர் உத்தரவு!

அதே நேரத்தில் 40 தனியார் பல்கலைக்கழகங்களில் சிறுவர், சிறுமிகள் கல்வி கற்று வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கிடையில் பெண்கள் அரசுப் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு வரை மட்டுமே படிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். அதாவது ஆகஸ்ட் நடுப்பகுதியில் ஆப்கானிஸ்தானை தலிபான் கையகப்படுத்தியதிலிருந்து, பெரும்பாலான பகுதிகளில் பெண்கள் 7ம் வகுப்புக்கு மேல் கலந்துகொள்ள அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் வரும் மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!