பள்ளிகள், திரையரங்குகள் மீண்டும் திறக்க அனுமதி – மாநில அரசு உத்தரவு!
கர்நாடகாவில் கொரோனவின் புது உருவமான ஓமைக்ரான் தொற்று பரவல் காரணமாக கடந்த மாதம் புத்தாண்டை ஒட்டி அம்மாநில அரசு புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகளை அறிவித்தது. தற்போது அரசு விதித்த கட்டுப்பாடுகள் தளர்த்த முடிவு செய்துள்ளதாக கர்நாடக மாநில அரசு தெரிவித்துள்ளது.
மாநில அரசு உத்தரவு:
உலகில் 90 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. கொரோனா பரவலின் 2 வது அலை குறைந்துள்ளதை தொடர்ந்து தற்போது தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் வேகமெடுத்து பரவி வருகிறது. இந்தியா, அமெரிக்கா, இத்தாலி, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட மேலும் பல நாடுகளில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இந்தியாவில் 3ம் அலையின் துவக்கமாக கொரோனா தொற்று அதிக அளவில் உறுதி செய்யப்பட்டு வருகிறது. மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு ,டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு காரணமாக புதிய கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது.
தமிழகத்தில் பிப். 9 அரசு வேலைவாய்ப்பு முகாம் – மாத சம்பளமாக ரூ.14,996! மிஸ் பண்ணிடாதீங்க!
தற்போது நோய் தொற்று குறைந்து வருவதால், பல மாநிலங்கள் குடிமக்களுக்கான கோவிட் விதிமுறைகளை தளர்த்த முடிவு செய்துள்ளன. அந்த வகையில் கர்நாடக மாநிலத்தில் கொரோனா வைரஸ் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து விதிக்கப்பட்ட கடுமையான வழிகாட்டுதல்களை தளர்த்த கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இனிமேல், மாநிலத்தில் உள்ள பள்ளிகள், ஜிம்கள், அனைத்து கல்வி நிறுவனங்கள் , தனியார் அலுவலகங்கள் மற்றும் திரையரங்குகள் நாளை முதல் திறக்கப்பட்டு செயல்படும் என்று கர்நாடக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
IPL அப்டேட்: பிப். 12 இல் தொடங்கும் மெகா ஏலம் – BCCI வெளியிட்ட விதிமுறைகள்!
கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு குறித்து முதலமைச்சர் பொம்மை, சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதை அடுத்து இந்த முடிவுகள் வெளியாகியுள்ளன. கர்நாடகாவில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்த முடிவு செய்து கல்லூரிகள், பள்ளிகள், மற்றும் ஜிம்களை திறக்கப்பட்டதை தொடர்ந்து இந்தியாவின் தலைநகரமான டெல்லியிலும் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்த அம்மாநில அரசு ஆலோசனை கூட்டம் மேற்கொள்ள போவதாக தகவல் வெளியாகியுள்ளது.