ஜூலை 15 முதல் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறப்பு – குஜராத் அரசு முடிவு!!
ஜூலை 15ம் தேதி முதல் 12ம் வகுப்பு, இளங்கலை மற்றும் முதுகலை வகுப்புகளுக்கு கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட இருப்பதாக குஜராத் அரசு முடிவு செய்துள்ளது.
கல்வி நிறுவனங்கள் திறப்பு:
குஜராத் மாநிலத்தில் கடந்த வியாழக்கிழமை நிலவரப்படி, தொடர்ந்து இரண்டு நாட்களாக கொரோனா உயிரிழப்புகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை. மாநிலத்தில் மொத்தம் 10,072 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். 534 பேர் சிகிச்சையில் இருந்து குணமடைந்து உள்ளனர். இதனால் மாநிலத்தின் தொற்று மீட்பு விகிதம் 98.60% ஆக உள்ளது. 1,497 பேர் நோய் பாதிப்புக்கு சிகிச்சை எடுத்து வருகின்றனர். மொத்தம் உள்ள 18 மாவட்டங்களில் புதிதாக தொற்று உறுதி செய்யப்படவில்லை. இறுதியாக வியாழக்கிழமை 62 பேருக்கு மட்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று முதல் வார இறுதி ஊரடங்கு உத்தரவு – புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு!
இதுவரை 8,24,091 பேர் மாநிலத்தில் தொற்று பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர் என்று மாநில சுகாதாரத்துறை அதிகாரி அறிவித்துள்ளார். 18 நகர்ப்புறங்களில் 10 பகுதியில் இருந்து இரவு நேர ஊரடங்கை தளர்த்தியுள்ளனர். மற்ற இடங்களில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு நேர ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. மேலும், ஜூலை 10ம் தேதி முதல் 20ம் தேதி வரை அகமதாபாத், சூரத், ராஜ்கோட், வதோதரா, பாவ்நகர், ஜாம்நகர், ஜுனகத் மற்றும் காந்திநகர் ஆகிய 8 முக்கிய நகரங்களில் மட்டும் இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும்.
TN Job “FB Group” Join Now
பூஜ், மோர்பி, படான், மெஹ்சானா, பருச், நவ்சரி, வல்சாத், அங்கலேஷ்வர், வாபி மற்றும் காந்திதாம் ஆகிய இடங்களில் இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்காது. மாநிலத்தில் கொரோனா பரவல் அச்சம் குறைந்துள்ளதால், ஜூலை 15ம் தேதி முதல் 12ம் வகுப்பு, இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளுக்கு பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட இருப்பதாக குஜராத் அரசு நேற்று அறிவித்துள்ளது. அதிகபட்சமாக 50% மாணவர்கள் வகுப்புகளில் கலந்து கொள்வார்கள். மாணவர்களின் வருகை கட்டாயமாக இருக்காது என்றும் மாநில முதல்வர் விஜய் ரூபானி அறிவித்துள்ளார்.