செப்.27ம் தேதி பள்ளி, கல்லூரிகள் & அரசு அலுவலகங்கள் செயல்படாது? நாடு தழுவிய போராட்டம் அறிவிப்பு!
இந்தியாவில் விவசாயிகள் வருகின்ற 27 ஆம் தேதி காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை நாடு தழுவிய பந்த் அறிவித்துள்ளனர்.
விவசாயிகள் பந்த்:
இந்தியாவில் கடந்த வருடம் மத்திய அரசு விசாயிகளுக்கு புதிய வேளாண் சட்டங்களை உருவாக்கியது. இந்த சட்டங்கள் அனைத்தும் தனியார் துறையை ஊக்குவித்தாக இருந்தது. இதனால் எதிர்காலத்தில் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்று விவசாயிகள் கருத்து தெரிவித்தனர். இந்த புதிய சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தலைநகர் டெல்லி பரபரப்பான சூழலை சந்தித்தது. போராட்டத்தை கைவிடுமாறு மத்திய அரசு விவசாயிகளிடம் தொடர்ந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர் ஆனாலும் விவசாயிகள் போராட்டத்தை கைவிடவில்லை.
நவம்பர் 1 முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பு – மாநில அரசு முடிவு!
வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் கடந்த நவம்பர் மாதம் முதல் போராட்டங்கள் தற்போது வரை தொடர்ந்து வருகிறது. பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லி எல்லைகளை முற்றுகையிட்டு உள்ளனர். 3 புதிய சட்டங்களையும் திரும்ப பெற வேண்டும் என்பதில் விவசாயிகள் உறுதியாக இருக்கின்றன. சட்டங்களை ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என்றும் தெரிவித்துள்ளனர்.
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
இந்நிலையில் விவசாயிகள் செப்டம்பர் 27 ஆம் தேதி காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு தழுவிய பந்த் அறிவித்துள்ளனர். 27ம் தேதி அன்று அனைத்து மாநிலங்களிலும் மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், சந்தைகள், கடைகள், தொழிற்சாலைகள், பள்ளி மற்றும் கல்லூரிகள் போன்றவை செயல்பட அனுமதிக்கப்படாது. மேலும் அரசு வாகன போக்குவரத்து நிறுத்தப்படும் எனவும் கூறியுள்ளனர்.