கொரோனா பரவலால் மீண்டும் மூடப்படும் பள்ளி, கல்லூரிகள்? கல்வித்துறை அமைச்சர் விளக்கம்!

0
கொரோனா பரவலால் மீண்டும் மூடப்படும் பள்ளி, கல்லூரிகள்? கல்வித்துறை அமைச்சர் விளக்கம்!
கொரோனா பரவலால் மீண்டும் மூடப்படும் பள்ளி, கல்லூரிகள்? கல்வித்துறை அமைச்சர் விளக்கம்!
கொரோனா பரவலால் மீண்டும் மூடப்படும் பள்ளி, கல்லூரிகள்? கல்வித்துறை அமைச்சர் விளக்கம்!

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் குறைந்துள்ள நிலையில் கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்டு உள்ளன. தற்போது கர்நாடகா மாநில பள்ளிகளில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அதனை தொடர்ந்து பள்ளிகள் மீண்டும் மூடப்படுமா? என்பது குறித்து கல்வி அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

பள்ளிகள் மூடப்படுமா?

கொரோனா பெருந்தொற்றின் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அரசு விடுமுறை அறிவித்தது. இதனால் மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே மொபைல் அல்லது கணினி வாயிலாக ஆன்லைன் மூலம் தங்கள் பாடங்களை கற்று வந்தனர். ஆனால் தற்போது கொரோனா தடுப்பூசி மற்றும் ஊரடங்கு விதிமுறைகளை பின்பற்றியதன் காரணமாக நோய் பரவல் கட்டுக்குள் வரவழைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தொற்று பரவல் கட்டுக்குள் வந்ததால் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டன. தற்போது பருவ மழைக்காலம் என்பதால் ஏராளமான இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்து கொண்டிருக்கிறது.

தமிழக அரசு ஊழியர்களுக்கு ஷாக் அறிவிப்பு – ஓய்வு பெறும் வயது குறைப்பு? வெளியான தகவல்!

இதன் விளைவாக அதிகம் மழை பெறும் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து வருகிறது. அதை தொடர்ந்து தற்போது மழையின் அளவு குறைந்துள்ளதால் வகுப்புகள் இயல்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் கர்நாடகா மாநிலத்தில் 172 ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் 100க்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இவ்வாறு பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் மீண்டும் பள்ளிகள் மூடப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதற்கு கர்நாடக மாநில பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பி.சி.நாகேஷ் கூறியதாவது, தற்போது வரை 1 முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை. மேலும் மாணவர்கள் தங்கி இருக்கும் விடுதிகளில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பாக மாணவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் சாப்பிடாமல் தனிமனித இடைவெளியை பின்பற்றி சாப்பிட வேண்டும். அத்துடன் குளிக்க செல்லும் போது ஒன்றாக செல்ல கூடாது என்று தெரிவித்தார். பி.யூ.கல்லூரி மற்றும் 8 விடுதிகளுடன் கூடிய பள்ளிகளில் கொரோனா தொற்று அதிகம் பரவியுள்ளது.

தமிழகத்தில் டிச.14, 15ம் தேதிகளில் உள்ளுர் விடுமுறை – மாவட்ட நிர்வாகங்கள் அறிவிப்பு!

அதனால் அங்கு மருத்துவத்துறை மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் உள்ளடக்கிய குழுக்களை அமைத்து அங்குள்ள மாணவர்களை பரிசோதனை செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இக்குழு கல்வி நிலையங்களில் ஏற்படும் கொரோனா பரவலை தடுக்க தகுந்த நடவடிக்கைகளை செயல்படுத்தும். அத்துடன் தற்போது “கொரோனா தொற்று பரவல் சற்று குறைவாக உள்ளதால் பள்ளிகளை மீண்டும் மூடுவதற்கான திட்டம் ஏதும் இல்லை” என்றும் கூறியுள்ளார். மேலும் மாணவர்கள் பள்ளிகளுக்கு மிக ஆர்வமாக வருகிறார்கள் அதனால் ஏற்கனவே நடைமுறையில் இருந்த கட்டுப்பாடுகள் மட்டும் அமல்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!