தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறப்பு? நாளை முக்கிய ஆலோசனை!
தமிழகத்தில் கொரோனா 2 ஆம் அலை தொற்று சற்றே குறைந்து வரும் நிலையில் மூடப்பட்டுள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளை மீண்டுமாக திறப்பது குறித்து உயர்கல்வித்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் நாளை (ஜூலை 16) முக்கிய ஆலோசனை நடத்த உள்ளனர்.
கல்வி நிறுவனங்கள் திறப்பு
கொரோனா 2 ஆம் அலை பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு முதல் பள்ளிகள், கல்லூரிகள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளது. இதனிடையே மாநிலம் முழுவதும் கொரோனா தொற்று குறைந்து வந்ததன் அடிப்படையில், கடந்த ஆண்டின் இறுதியில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது. பின்னர் ஏப்ரல் மாதத்தில் மீண்டுமாக பரவத்துவங்கிய கொரோனா 2 ஆம் அலை காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டது. அதே போல கல்லூரிகளிலும் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டது.
ஆன்லைனில் FASTag ரீசார்ஜ் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
இந்நிலையில் பல மாநிலங்களிலும் கொரோனா பரவல் குறைந்து வந்ததையொட்டி கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மீண்டுமாக திறக்கப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து தமிழகத்திலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் எப்போது துவங்கும் என்ற எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளது. எனினும் தற்போது துவங்கியுள்ள புதிய கல்வியாண்டில் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் வழியாகவும், கல்வி தொலைக்காட்சி வழியாகவும் பாடங்கள் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பள்ளிகள் திறப்பது குறித்த முக்கிய ஆலோசனை மேற்கொள்ளப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
TN Job “FB Group” Join Now
இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளுடன் நாளை (ஜூலை 16) ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கூட்டத்தில் பள்ளிகள் திறப்பு, மாணவர் சேர்க்கை, பாடப்புத்தகங்கள், மடிக்கணினி வழங்கப்பட்ட விவரம், பள்ளிகளுக்கான அங்கீகாரம் வழங்குவது உள்பட பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தின் கருத்துகள், மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகள் உள்ளிட்டவைகளின் அடிப்படையில் பள்ளிகளை மீண்டுமாக திறப்பது குறித்த இறுதி முடிவை முதல்வர் அறிவிப்பார் என கூறப்பட்டுள்ளது.