பள்ளி, கல்லூரிகள் ஜூலை 1 முதல் மீண்டும் திறப்பு – பெற்றோர்கள் எதிர்ப்பு!
தெலுங்கானா மாநிலத்தில் வரும் ஜூலை 1ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்க அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புக்கு காலத்தில் பெற்றோர்கள் மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பள்ளிகள் திறப்பு:
தெலுங்கானா மாநிலத்தில் கொரோனா பரவல் காரணமாக மே 12ம் தேதி முதல் அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் அனைத்தும் ஜூன் 19ம் தேதி முதல் நீக்கப்பட்டது. தொற்றின் தாக்கம் குறைந்து விட்டதால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீக்குவதாக அரசு அறிவித்தது. இதனால் மாநிலத்தில் ஜூலை 1ம் தேதி முதல் அனைத்து கல்வி நிறுவனங்களையும் மீண்டும் திறக்குமாறு அரசு கேட்டுக்கொண்டது. மாணவர்கள் முழுமையாக நேரடி வகுப்புகளில் கலந்து கொள்ளவும் அனுமதி வழங்கியுள்ளது.
இன்று முதல் ஜூன் 28 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு – கூடுதல் தளர்வுகள் அறிவிப்பு!
கொரோனா தொற்றின் 3ம் அலை குழந்தைகளை அதிக அளவில் பாதிக்க வாய்ப்புள்ளது என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ள நிலையில் தனியார் பள்ளிகளின் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப அச்சம் கொள்கின்றனர். இதனால் அரசின் இந்த முடிவை மறுபரிசீலினை செய்து ஆன்லைன் கல்வி முறையை தொடர வேண்டும் என்று பெற்றோர்கள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இது குறித்து ஹைதராபாத் பள்ளி பெற்றோர் சங்கத்தின் உறுப்பினர் சந்திரஜீத் சிங் என்கிற பெற்றோர், தெலுங்கானா அரசு பள்ளிகளை திறப்பது குறித்து அவசர முடிவை எடுத்துள்ளது. COVID-19ன் மூன்றாவது அலை குழந்தைகளை பாதிக்கும் அச்சுறுத்தல் உள்ள நிலையில் பள்ளிகளை திறப்பது நல்ல முடிவாக இல்லை. தொற்று நோய் அபாயம் இன்னும் முழுமையாக குறையவில்லை. பள்ளிக்கு நேரடி வகுப்பிற்கு மாணவர்களை அழைத்திருப்பது அனைத்து தரப்பு பெற்றோர்களையும் கவலை அடைய செய்திருக்கிறது என்று கூறியுள்ளார்.
TN Job “FB Group” Join Now
செப்டம்பர் 2020 இல், தெலுங்கானா அரசு டி.எஸ்.ஏ.டி (தெலுங்கானா சேட்டிலைட் நெட்வொர்க்) மூலம் அரசு பள்ளி குழந்தைகளுக்கான ஆஃப்லைன் வகுப்புகளைத் தொடங்கியது. தூர்தர்ஷன் நெட்வொர்க் மற்றும் யூடியூபில் வாயிலாக காணும் வகையிலான ஆடியோ காட்சி முறை மூலம் பாடங்களை ஒளிபரப்பியது. இந்த வசதியினால் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மாணவர்களும் பலனடையலாம் என்று பலரும் தெரிவித்துள்ளனர்.