தமிழகத்தில் மார்ச் 4ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டம், சுவாமித் தோப்பு அய்யா வைகுண்டசாமி பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மார்ச் 4ம் தேதி திருநெல்வேலி மாவட்ட அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்று மாவட்ட ஆட்சியா் விஷ்ணு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு:
தமிழ்நாடு முழுவதும் அய்யா வைகுண்டர் உதய தினமான மார்ச் 4ம் தேதி சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. மேலும் அய்யா வைகுண்டர் தாழ்த்தப்பட்ட இன மக்களின் மறுக்கப்பட்ட உரிமைகளை மீட்டெடுக்க போராடியவர்.அத்துடன் தமிழகத்தில் சாதிக் கொடுமைகளை எதிர்த்து போராடியவர். இவர் அனைத்து சாதி மக்களையும் ஒன்றிணைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் தமிழக மக்கள் அய்யா வைகுண்டரை வணங்கி வருகின்றனர். மேலும் வருடம் தோறும் தமிழகம் முழுவதும் அய்யா வைகுண்டர் திருநாள் மிக வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. அய்யா வைகுண்டருக்கு கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பில் வழிபாட்டு தளம் அமைக்கப்பட்டு உள்ளது.
உக்ரைன், ரஷ்யா விவகாரத்தில் தலையிட மறுக்கும் அமெரிக்கா – சொத்துக்களை முடக்குவதாக பைடன் அறிவிப்பு!
இந்த நிலையில் சுவாமித் தோப்பு அய்யா வைகுண்டசாமி பிறந்த தினத்தை முன்னிட்டு மாா்ச் 4-ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் மாா்ச் 4ஆம் தேதி அன்று அரசு பொதுத் தோ்வுகள் ஏதும் இருப்பின் பொதுத் தோ்வு எழுதும் பள்ளி மாணவா்களுக்கு பொதுத் தோ்வு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பொதுத் தோ்வு தொடா்பாக பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியா்கள் மற்றும் அலுவலா்களுக்கு இந்த உள்ளூா் விடுமுறை பொருந்தாது.
அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 3% உயர்வு – மாநில அரசு அறிவிப்பு!
இந்த உள்ளூர் விடுமுறையானது செலவாணி முறிச்சட்டம் 1881-இன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால் வங்கிகளுக்கு உள்ளூா் விடுமுறை பொருந்தாது. மாவட்ட கருவூலம் மற்றும் அனைத்து சார்நிலைக் கருவூலங்களும் குறைந்தபட்ச பணியாளா்களை கொண்டு அரசு கோப்புகள் தொடா்பாக அவசரப் பணிகளை கவனிப்பதற்காக செயல்படும். இந்த உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் மார்ச் 12ஆம் தேதி வேலை நாள் என்று மாவட்ட ஆட்சியா் விஷ்ணு செய்தி குறிப்பில் குறிப்பிட்டு உள்ளார்.