பிப். 24 (நாளை) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – அரசு அதிரடி அறிவிப்பு!
கர்நாடக மாநிலத்தில் ஹர்ஷா வெட்டிக் கொல்லப்பட்டதை தொடர்ந்து அப்பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 2 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தற்போது இந்த விதிமுறை மேலும் சில நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
144 தடை உத்தரவு
இந்தியாவில் கொரோனா பரவலின் தாக்கம் குறைய தொடங்கியதை தொடர்ந்து மாநிலங்களில் பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்து வந்தது. அதன்படி கர்நாடக மாநிலத்தில் அனைத்துக் கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டது. அத்துடன் பள்ளி மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல் செயல்பட தொடங்கியது. இந்த நிலையில் ஹிஜாப் விவகாரம் தொடர்பாக பிரச்சனை எழுந்தது. அதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் பல பகுதிகளில் கலவரங்கள் ஏற்பட்டது. இதனால் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்றோருக்கு ஹாப்பி நியூஸ் – தள்ளுபடி சான்றிதழ்!
இதனை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு கர்நாடகாவில் உள்ள ஷிவமொகா மாவட்டத்தில் பஜ்ரங் தளம் அமைப்பைச் சேர்ந்த ஹர்ஷா என்பவர் வெட்டிக் கொல்லப்பட்டார். அதனால் இந்த படுகொலைக்கு எதிராக இந்த அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் கலவரங்கள் ஏற்படாமல் தடுக்க ஏராளமான போலீசார்கள் குவிக்கப்பட்டார்கள். ஆனாலும் நகரின் பல பகுதிகளில் போராட்டங்கள் எழுந்தது. அத்துடன் கல்வீச்சு சம்பவங்கள், வாகனங்களுக்கு தீ வைப்பு உள்ளிட்டவையும் ஏற்பட்டது. அதனால் போராட்டத்தை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
IPL 2022: சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு ஷாக் – தீபக் சாஹர் விலகல்?
இதையடுத்து அந்த மாவட்டம் முழுவதும் 2 நாட்களுக்கு 144 தடை விதிக்கப்பட்டது. அத்துடன் அப்பகுதியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு 2 நாள் விடுமுறை அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது இந்த விதிமுறை முடிவடைவதால் மேலும் இரண்டு நாட்களுக்கு நீடிக்கப்படுவதாக துணை கமிஷனர் தெரிவித்து உள்ளார். அதன்படி நாளை காலை 6 மணியில் முதல் இரவு 9 மணி வரை மட்டுமே பொதுமக்கள் நடமாட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதை வெள்ளிக்கிழமை காலை வரை பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது