தமிழகத்தில் பிப்ரவரி 19 முதல் 4 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – தேர்தல் எதிரொலி!
தமிழகத்தில் பிப்ரவரி 19ம் தேதி முதல் நடத்தப்பட இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வாக்கு இயந்திரங்கள் வைக்கப்படும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு மட்டும் 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
விடுமுறை அறிவிப்பு:
தமிழகம் முழுவதும் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சி அமைப்புகளுக்கு வரும் பிப்ரவரி 19ம் தேதியன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட இருக்கிறது. அந்த வகையில் மாநில தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்த படி, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலானது பிப்ரவரி 19 ஆம் தேதி துவங்கி ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. மேலும் வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22ம் தேதி நடைபெற உள்ளது. அந்த வகையில் தற்போது பொது தேர்தல்களை நடத்தும் பணியில் மாநில தேர்தல் ஆணையம் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
ஜனவரி 31 முதல் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? அதிபர் திடீர் விளக்கம்!
இந்நிலையில் தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு மின்னணு வாக்கு இயந்திரங்கள் வைக்கப்படும் பள்ளி, கல்லூரிகளுக்கு 4 நாட்கள் வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, தமிழகம் முழுவதும் பிப்ரவரி 19ம் தேதியன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட இருப்பதால் உள்ளூர் திருவிழாக்கள் குறித்தும், UPSC தேர்வுகள் குறித்தும் தேர்வுத்துறை அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையர் ஆலோசனை மேற்கொண்டார்.
பிப்.6 வரை அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை நீட்டிப்பு – மாநில அரசு உத்தரவு!
அப்போது பிப்ரவரி 20ம் தேதியன்று தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள மையங்களில் UPSC தேர்வுகள் நடத்தப்பட இருப்பதை தேர்வுத்துறை அதிகாரிகள் குறிப்பிட்டனர். இதனால் தேர்வு நடைபெறும் மையங்களில் மின்னணு வாக்கு இயந்திரங்கள் வைக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மின்னணு வாக்கு இயந்திரங்கள் வைக்கப்படும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு வாக்கு எண்ணிக்கை முடிவடையும் வரையில், 4 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.