செப்.6ம் தேதி பள்ளி, கல்லூரிகளை திறக்க அனுமதி – நாளை முதல் ஊரடங்கு தளர்வுகள் அமல்!

0
செப்.6ம் தேதி பள்ளி, கல்லூரிகளை திறக்க அனுமதி - நாளை முதல் ஊரடங்கு தளர்வுகள் அமல்!
செப்.6ம் தேதி பள்ளி, கல்லூரிகளை திறக்க அனுமதி - நாளை முதல் ஊரடங்கு தளர்வுகள் அமல்!
செப்.6ம் தேதி பள்ளி, கல்லூரிகளை திறக்க அனுமதி – நாளை முதல் ஊரடங்கு தளர்வுகள் அமல்!

அசாம் மாநிலத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளாக விதிக்கப்பட்டிருந்த முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளில் இருந்து அரசு சில தளர்வுகளை அறிவித்துள்ளது. அதன் கீழ் மாவட்டங்களுக்கு இடையேயான பயணிகள் வாகனங்களை இயக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு தளர்வு

நாடு முழுவதும் கொரோனா 2 ஆம் அலை தாக்கம் குறைந்து வரக்கூடிய சூழலில், அசாம் மாநிலத்திலும் தொடர்ந்து புதிய பாதிப்புகள் வீழ்ச்சியடைந்து வருகிறது. இதை தொடர்ந்து ஊரடங்கு கட்டுப்பாடுகளாக தடை செய்யப்பட்டிருந்த சில செயல்பாடுகளுக்கு அரசு அனுமதி கொடுத்துள்ளது. அந்த வகையில் நாளை (செப்டம்பர் 2) முதல் அசாம் மாநில அரசு, இரவு நேர ஊரடங்கு நேரத்தை தளர்த்துவதாக அறிவித்துள்ளது. இதனுடன் மாவட்டங்களுக்கு இடையேயான வாகனங்களின் போக்குவரத்தும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஒரே நாளில் 1.25 கோடி பேருக்‍கு தடுப்பூசி – புதிய சாதனை!

அதே நேரத்தில் கல்லூரிகளில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கும், பள்ளிகளிலும் நேரடி வகுப்புகளை தொடங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் மாநிலம் முழுவதும் விதிக்கப்பட்டுள்ள இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாடுகள், இனி தினசரி இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை அமலில் இருக்கும். ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வரும் ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக அலுவலகங்கள், கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் இரவு 8 மணிக்கு மூடப்படிருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அலுவலகம் வரும் கர்ப்பிணி பெண் ஊழியர்கள் மற்றும் 3 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிக்கப்படுள்ளனர். மாவட்டங்களுக்கு இடையேயான பயணிகள் வாகனங்களின் இயக்கம் 100% திறனுடன் அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் பயணிகள் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசி எடுத்திருக்க வேண்டும் எனவும், கட்டாயமாக முகக்கவசம் அணிந்து பயணிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

தொடர்ந்து செப்டம்பர் 6 முதல் கல்லூரிகளுக்கு வரும் மாணவர்கள் குறைந்தபட்சம் ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசி எடுத்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஒவ்வொரு பிரிவிலும் 30 மாணவர்கள் வரை மட்டுமே அனுமதிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. திருமணங்கள், மத சடங்குகள் மற்றும் இறுதி சடங்குகளுக்கு, குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்ட 50க்கும் மேற்பட்ட நபர்களுக்கு மேல் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!