நாடு முழுவதும் அடுத்த சில வாரங்களில் பள்ளிகள் திறப்பு – இலங்கை அமைச்சர்!
இலங்கையில் கொரோனா மூன்றாம் அலை தாக்கம் குறைந்து வருவதால் அடுத்த சில வாரங்களில் கல்வி நிலையங்கள் திறக்க ஆலோசனை நடத்தி வருவதாகவும், இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி நிலையங்கள் திறப்பு:
இலங்கையில் கொரோனா மூன்றாம் அலை தாக்கம் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பல கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பொதுப்போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. அதன் விளைவாக மக்களின் பொருளாதாரம் பாதிக்கப்பட்ட காரணத்தால் அரசு சார்பில் நிவாரணமாக ரூ.5000 வழங்கப்பட்டுள்ளது.
VI வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு திட்டம் அறிமுகம் – தினசரி வரம்பில்லாத நெட் வசதி!!
இந்நிலையில் பல மாதங்களாக கல்வி நிலையங்கள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்ட நிலையில் தொடர்ந்து கொரோனா பரவல் குறைந்து வருவதால் பள்ளிகளை திறப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இந்நிலையில் அடுத்த சில வாரங்களில் கல்வி நிலையங்களை திறப்பது குறித்து இலங்கை அதிபருடன் ஆலோசனை நடத்திய பின்னர் அறிவிப்பு வெளியிடப்படும் என அந்நாட்டு கல்வித்துறை அமைச்சர் ஜி.எல்.பெய்ரிஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மேலும் பள்ளிகள் திறக்க உள்ள காரணத்தால் ஆசிரியர்கள் அனைவரும் விரைவாக தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதேபோல் பள்ளி நிர்வாகிகள், ஊழியர்களும் தடுப்பூசி போட அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் பிறகே மாணவர்கள் அனைவரும் பள்ளிக்கு வர அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளார். முதலில் 2,962 பள்ளிகளை மட்டும் திறக்க முடிவு செய்துள்ளோம். இந்த பள்ளிகளில் 100க்கு குறைவான மாணவர்கள் மட்டுமே உள்ளனர்.
அதாவது 1,439 பள்ளிகளில் 50க்கும் குறைவாகவும், 1,523 பள்ளிகளில் 51 முதல் 100 மாணவர்கள் வரையும் பயின்று வருகின்றனர். உரிய கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி பள்ளிகள் திறக்கப்படும். மாணவர்களின் உடல் நிலையில் எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
TN Job “FB Group” Join Now
மற்ற பள்ளிகளை திறப்பது குறித்து சிறப்பு திட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் மஹிந்தோதயா ஆய்வகங்கள், பள்ளிகள், கோயில்கள், சமூகக் கூடங்கள் ஆகியவையும் மாணவர்களின் நலன்களுக்காக பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட மையங்கள் வரும் 5 ஆம் தேதி முதல் செயல்படும் என அவர் தெரிவித்துள்ளார்.