தமிழகம் முழுவதும் ஜூன் 14 முதல் பள்ளிகள் திறப்பு – தலைமை ஆசிரியர்களுக்கு செயல்முறைகள்!

0
தமிழகம் முழுவதும் ஜூன் 14 முதல் பள்ளிகள் திறப்பு - தலைமை ஆசிரியர்களுக்கு செயல்முறைகள்!
தமிழகம் முழுவதும் ஜூன் 14 முதல் பள்ளிகள் திறப்பு - தலைமை ஆசிரியர்களுக்கு செயல்முறைகள்!
தமிழகம் முழுவதும் ஜூன் 14 முதல் பள்ளிகள் திறப்பு – தலைமை ஆசிரியர்களுக்கு செயல்முறைகள்!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் ஜூன் 14 முதல் பள்ளிக்கு வருகை புரிய வேண்டும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். மேலும் அவர்களின் செயல்முறைகளை வெளியிடப்பட்டு உள்ளன.

தலைமை ஆசிரியர்கள் செயல்முறைகள்:

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஒரு வருட காலமாக பள்ளிகள் திறக்கப்படவில்லை. வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது. ஆசிரியர்கள் மட்டும் பள்ளிகளுக்கு வருகை புரிந்து அலுவலக பணிகளை மேற்கொண்டனர். பிறகு கொரோனா 2வது அலை காரணமாக ஆசிரியர்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் மே மாதம் வெயிலின் தாக்கம் காரணமாக வழக்கம் போல கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. மறு அறிவிப்பு வரும் வரை ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது.

கடன் தவணை EMI செலுத்த கால அவகாசம் வழங்குதல் – உச்ச நீதிமன்றம் மறுப்பு!

இதன் தொடர்ச்சியாக ஆசிரியர்கள் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட வேண்டும் என உத்தரவிடப்பட்டது. அவர்கள் களத்திற்கு சென்று விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும் என அரசு அறிவுறுத்தியது. ஓய்வு பெறும் வயதில் உள்ளவர்கள், கர்ப்பிணிகள், இணை நோய் உள்ளவர்களுக்கு மட்டும் கொரோனா தடுப்பு பணியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஜூன் 1 முதல் தமிழகத்தில் புதிய கல்வியாண்டு தொடங்கியுள்ளது. 1 முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவித்துள்ளது.

TN Job “FB  Group” Join Now

ஜூன் 14 முதல் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் பள்ளிக்கு வருகை புரிய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் தலைமை ஆசிரியர்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வருகை புரிய வேண்டும். பள்ளிகளில் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குதல், பட புத்தகங்கள் வழங்குதல், மாணவர் சேர்க்கை, பள்ளி வளாகத்தை சுத்தம் செய்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!