ஆகஸ்ட் 2 முதல் 10, 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – மாநில அரசு உத்தரவு!
சத்தீஸ்கர் மாநிலத்தில் வரும் ஆகஸ்ட் 2ம் தேதி முதல் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளில் நேரடி வகுப்புகளை தொடங்குவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது.
பள்ளிகள் திறப்பு:
கொரோனா தொற்றின் பாதிப்புகள் அதிக அளவில் இருந்ததால் நாடு முழுவதும் உள்ள கல்வி நிலையங்கள் அனைத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முதலில் மூடப்பட்டது. தற்போது, ஒவ்வொரு நாளும் கோவிட்-19 வழக்குகளின் எண்ணிக்கை குறைந்து வருவதால், பல மாநில அரசுகள் மாநிலத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்களை மீண்டும் திறக்கும் முடிவெடுத்துள்ளது.
க்ருனால் பாண்டியாவிற்கு கொரோனா – IND vs SL 2வது T20 போட்டி ஒத்திவைப்பு!
சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதிப்பு நிலவரம் குறைந்துள்ளதால் ஆகஸ்ட் 2ம் தேதி முதல் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது. கிராமப்புறங்களில் 1 முதல் 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகளை மீண்டும் தொடங்குவதற்காக கிராம பஞ்சாயத்துகள் ஆலோசித்து வருகின்றது. ஆனால் தொடர்ந்து நேரடி வகுப்புகளில் கலந்து கொள்ளாத மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளும் நடைபெறும். தொடர்நது ஏழு நாட்கள் கோவிட்-19 நேர்மறை விகிதம் ஒரு சதவீதத்தை விடக் குறைவாக உள்ள மாவட்டங்களில் மட்டுமே பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்றும் சத்தீஸ்கர் அரசு கூறியுள்ளது.
TN Job “FB Group” Join Now
பள்ளிகளுக்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. மாணவர்கள் 50% அளவிற்கு மாற்று நாட்களில் வகுப்புகளில் கலந்து கொள்ள வேண்டும். மேலும், சளி, காய்ச்சல், இருமல் உள்ளிட்ட அறிகுறிகளைக் கொண்ட மாணவர்கள் வகுப்பறைக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஆகஸ்ட் 2ம் தேதி முதல், மாநிலத்தில் உள்ள அனைத்து தொழில்துறை பயிற்சி நிறுவனங்களும் (ஐ.டி.ஐ) தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.