தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – பள்ளி நேரத்தை மாற்றுமா அரசு?
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளி நேரத்தை 7.30 லிருந்து 12.30 வரை மாற்றியமைக்க வேண்டும் என ஆசிரியர் சங்கம் சார்பில் தமிழக அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
பள்ளி நேரம் மாற்றம்:
கடந்த இரண்டு ஆண்டுகளாகவே தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகமாக இருந்த காரணத்தினால் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவில்லை. மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே பாடம் கற்பிக்கப்பட்டு வந்தது. அதே போல இரண்டு ஆண்டும் பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறவில்லை. தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்று ஓரளவுக்கு குறைந்துள்ளதால் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
ஆதார், பான் கார்டு வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு – இணைக்காவிட்டால் ஏற்படும் விளைவுகள்!
இந்தாண்டு 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கண்டிப்பாக பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது மற்றும் பொதுத்தேர்வுக்குரிய அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது. ஆன்லைன் வழியாக சரியாக பாடம் கற்பிக்காததால் தற்போது வேக வேகமாக பொதுத்தேர்வுக்குரிய பாடங்கள் நடத்தப்படுகிறது. எப்போதும் ஏப்ரல் மாதத்தின் பாதியிலேயே அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வு முடிந்து விடுமுறை அளிக்கப்படும். தற்போது மாணவர்களுக்கு மே 13 ஆம் தேதி வரை தேர்வு இருக்கிறது.
தற்போது தான் ஏப்ரல் மாதத்தின் முதல் வாரத்தில் இருக்கிறோம். அதற்குள் வெயில் வாட்டி வதக்கி கொண்டிருக்கிறது. கடந்த சில வருடங்களை விட இந்தாண்டு தான் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இதனால் பள்ளியின் நேரத்தை 7.30 லிருந்து 12.30 வரை மாற்றியமைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஆந்திராவில் பள்ளி நேரத்தை 8 முதல் 11 மணியாக மாற்றியுள்ளனர். இதனை தொடர்ந்து தமிழகத்திலும் பள்ளியின் நேரத்தை மாற்றியமைக்க வேண்டும் என ஆசிரியர் சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.