தமிழகத்தில் பள்ளிகள் திறக்கும் நேரத்தில் மாற்றம் – கல்வித்துறையின் அறிவிப்பு சொல்வது என்ன?
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளும் ஜூன் 13ம் தேதியான நாளை 2022-2023ம் கல்வியாண்டை தொடங்கும் விதமாக திறக்கப்படுகின்றது. இதற்கான அறிவிப்பை அரசு முன்னரே வெளியிட்டிருந்த நிலையில், தற்போது புதிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
புதிய கல்வி ஆண்டு:
தமிழகத்தில் 2021-2022ம் கல்வி ஆண்டில் தான் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு பிறகு பள்ளிகள் சுழற்சி முறையிலும், கட்டுப்பாடுகளுடனும் செயல்படத் தொடங்கியது. அதற்கு இடையிலும் கொரோனா 3ம் அலை பாதிப்புகள் அதிகரித்ததன் காரணமாக ஜனவரி மாதம் முழுவதும் பள்ளிகள் மீண்டும் மூடப்பட்டது. கொரோனா பாதிப்பு குறைந்த பின்னர், பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி முன்னதாக உயர் வகுப்பு மாணவர்களான 10 முதல் 12ம் வகுப்பு வரையில் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
தமிழகம் முழுவதும் திட்டமிட்டபடி ஜூன் 13ம் தேதி பள்ளிகள் திறப்பு – அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி!
இந்நிலையில் திட்டமிட்டபடி மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகளும் நடத்தப்பட்டு, கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் 2022- 2023ம் கல்வி ஆண்டு வழக்கம் போல் செயல்பட உள்ளதாகவும், இதற்காக பள்ளிகள் 1 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 13ம் தேதியிலும், 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 27ஆம் தேதியும், 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20ஆம் தேதியும் திறக்கப்பட உள்ளது. தற்போது தமிழகத்தின் முக்கிய மாவட்டங்களில் கொரோனா மீண்டும் பரவத் தொடங்கி உள்ளது.
Exams Daily Mobile App Download
இதனால் பள்ளிகள் திறக்கப்படுவதில் மாற்றங்கள் அறிவிக்கப்படுமா என்று மக்கள் மத்தியில் குழப்பம் எழுந்துள்ளது. இது குறித்து பேசியுள்ள பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள், மாணவர்களுக்கு முதல் 5 நாட்களுக்கு நல்லொழுக்க வகுப்புகள் தான் நடத்தப்படும். பள்ளிகளில் அனைத்து முன்னேற்பாடு மற்றும் அடிப்படை வசதிகளும் முறையாக செய்யப்பட்டுள்ளதா என்று அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். பள்ளிகளின் வேலை நேரத்தை சம்பந்தப்பட்ட பள்ளிகளே தீர்மானித்துக் கொள்ளலாம். அதேபோல், 8 பாட வேளைகள் இருக்க வேண்டும் என்றும் பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.