பள்ளிகள் செயல்படும் நேரத்தில் மாற்றம் – தமிழக மாணவர்கள் கவனத்திற்கு! அமைச்சர் அறிவிப்பு!
தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் ஜூன் 13ம் தேதி மீண்டும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகள் திறக்கப்பட்டவுடன் வேலை நேரத்தில் மாற்றம் இருக்கும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
நேரம் மாற்றம்:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் குறைந்து வந்ததை அடுத்து கடந்த 2021 ஆகஸ்ட் மாதம் படிப்படியாக பள்ளிகள் திறக்க தொடங்கியது. வழக்கம் போல நேரடி வகுப்புகள் நடைபெற்று வந்த நிலையில் 10,12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்த மாநில பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டது. கடந்த வருடம் கொரோனா அச்சம் காரணமாக பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு மதிப்பீட்டு முறையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. நடப்பு கல்வியாண்டில் நேரடி வகுப்புகள் நடைபெறுவதால் 10,12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வை நடத்த மாநில கல்வித்துறை திட்டமிட்டது.
மே 31 பொது விடுமுறை அறிவிப்பு – முக்கிய தகவல் இதோ!
அதன்படி கடந்த 2ம் தேதி 1 – 9ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வு தொடங்கியது. தேர்வானது ஜூன் 13ம் தேதி தேர்வு முடிவடைந்தது. அதன் பிறகு அம் மாணவர்களுக்கு கோடை விடுமுறை தொடங்கியது. ஜூன் 13ம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20ம் தேதியும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 27ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்டவுடன் வேலை நேரம் மாற்றம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
பள்ளிகள் திறக்கப்பட்டவுடன் 2022 – 2023 ம் கல்வியாண்டில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. புதிய திட்டமாக அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் பள்ளி வேலை நேரங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதன் படி மாணவர்கள் காலையில் 8.30 மணிக்கு பள்ளிக்கு வரவேண்டும் என்றும் 9 மணிக்கு வகுப்புகள் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.