நிலவும் கடும் குளிர் – 2 மணி வரை மட்டுமே வகுப்புகள்… லக்னோ கல்வித்துறை அறிவிப்பு!

0
நிலவும் கடும் குளிர் - 2 மணி வரை மட்டுமே வகுப்புகள்... லக்னோ கல்வித்துறை அறிவிப்பு!
நிலவும் கடும் குளிர் - 2 மணி வரை மட்டுமே வகுப்புகள்... லக்னோ கல்வித்துறை அறிவிப்பு!
நிலவும் கடும் குளிர் – 2 மணி வரை மட்டுமே வகுப்புகள்… லக்னோ கல்வித்துறை அறிவிப்பு!

உத்திர பிரதேச மாநிலம் லக்னோவில் கடும் குளிர் நிலவுகிறது. இதன் காரணமாக அம்மாநிலத்தின் லக்னோ நகரில் பள்ளி மாணவர்களின் உடல் நலனை கருத்தில் கொண்டு பள்ளிகள் செயல்படும் நேரம் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது.

நேரம் குறைப்பு:

இந்தியாவில் அரியானா, சண்டிகர், டெல்லி, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து கடும் குளிர் நிலவுகிறது. இதனால் காலை நேரங்களில் பனி மூட்டம் நிலவுகிறது. இதனையடுத்து மக்களின் இயல்வு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களை தொடர்ந்து உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் பனியால் குளிர் நிலவுகிறது.

Follow our Instagram for more Latest Updates

இந்த நேரத்தில் பள்ளி மாணவர்களின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு லக்னோவில் பள்ளிகள் செயல்படும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது. அதன் படி 1 முதல் 8 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே வகுப்புகள் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் ஜன. 10ம் தேதி வரை இந்த நேரம் குறைப்பு தொடரும் என்றும் கூறப்பட்டுள்ளது. அந்நகரில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் இந்த உத்தரவு பொருந்தும் என்று கல்வித்துறை தெரிவிக்கப்ட்டுள்ளது. தற்போது இமயமலையில் இருந்து இந்தியாவில் வடமேற்கு பகுதிகளில் காற்று வீசுவதால் அடுத்த இரண்டு நாட்களுக்கு வெப்பநிலை 2-4 டிகிரி செல்சியஸ் ஆக குறைய கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிபிடத்தக்கது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!