அக்.16 முதல் பள்ளிகள் செயல்படும் நேரங்களில் மாற்றம் – மாநில அரசு அறிவிப்பு!
ராஜஸ்தான் மாநிலத்தில் ஓய்ந்து வரும் கொரோனா 2ம் அலை தொற்றுக்கு பின்னாக பள்ளிகள் மீண்டுமாக செயல்பட்டு வரும் நிலையில், அக்டோபர் 15ம் தேதி முதல் மார்ச் 31ம் தேதி வரையிலும் குளிர்கால நேரம் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிநேரம் மாற்றம்
ராஜஸ்தான் மாநிலத்தில் குறைந்துள்ள கொரோனா தொற்று சூழலுக்கு மத்தியில் கடந்த மாதம் முதலே பள்ளிகள் மீண்டுமாக திறக்கப்பட்டுள்ளது. வழக்கமாக ராஜஸ்தானில் உள்ள பள்ளிகள் அனைத்தும் கோடை காலத்தில், காலை 7.30 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், குளிர்காலத்தில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரையிலும் வகுப்புகள் நடத்தப்படுவது உண்டு. பொதுவாக ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 30ம் தேதி வரை பள்ளிகளில் கோடை நேரமும் மற்றும் அக்டோபர் 1 முதல் மார்ச் 31 வரை குளிர்கால நேரமும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
ரேஷன் கார்டில் மொபைல் எண் மாற்றம் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள்!
அந்த வகையில் இந்த ஆண்டு அக்டோபர் 1ம் தேதி முதல் குளிர்கால நேர முறைமையின் படி பள்ளிகள் நாளை முதல் காலை 10 மணியில் இருந்து மாலை 4 மணி வரையிலும் நடத்தப்பட வேண்டும். ஆனால் தற்போது அக்டோபர் 1ம் தேதிக்கு பதிலாக அக்டோபர் 16 ஆம் தேதி முதல் குளிர்கால நேர முறைகள் அனைத்து பள்ளிகளிலும் பின்பற்றப்படும் என ராஜஸ்தான் மாநில கல்வித் துறை இன்று (செப்டம்பர் 30) அறிவித்துள்ளது.
Airtel நிறுவனத்தின் 30GB டேட்டாவுடன் ரூ.299 ரீசார்ஜ் திட்டம் – முழு விபரங்கள் இதோ!
இது தொடர்பாக அம்மாநில கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘ராஜஸ்தான் மாநிலத்தில் தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு, பள்ளிகளில் குளிர்கால நேரங்களை அமல்படுத்துவது அக்டோபர் 15 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் கோடை நேரப்படி அக்டோபர் 15 வரை செயல்படும்’ என்று தெரிவித்துள்ளது. மேலும் இந்த ஆண்டுக்கான கோடை நேரமும் கிட்டத்தட்ட 15 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.