பள்ளி மாணவ மாணவியருக்கு அரசு கல்வி உதவித்தொகை !!!
பள்ளிகளில் பயிலும் சிறுபான்மையின மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை ஆனது வருடந்தோறும் வழங்கப்படும். அதன்படி இந்த கல்வி ஆண்டிற்கான உதவித்தொகை பெற விண்ணப்பிக்குமாறு மாணவர்களுக்கு சிறுபான்மையின நல இயக்கம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
சிறுபான்மையினருக்கு உதவித்தொகை !
இஸ்லாமியர், கிறிஸ்துவர், சீக்கியர், புத்தமதத்தினர், பார்சி மற்றும் ஜெயின் இனத்தினை சேர்ந்தவர்கள் மத்திய அரசால் சிறுபான்மையினர்களாக அறிவிக்கப்பட்டவர்கள் ஆவர். இந்த இனத்தினை சேர்ந்த மாணவ மாணவியர்கள் பள்ளியில் படிப்பவர்களாக இருந்தால் அவர்கள் இந்த கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.
இந்த சிறுபான்மையினத்தை சேர்ந்தவர்கள் மத்திய/ மாநில அரசு அல்லது அரசு உதவி பெறும் பள்ளிகளில் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பள்ளிகளில் படிப்பவர்களாக இருக்கும் பட்சத்தில் தங்களின் கல்வி செலவிற்காக இந்த உதவித்தொகை திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி !!
இந்த உதவித்தொகை ஆனது மத்திய சிறுபான்மையின அமைச்சகத்தினால் மாணவ மாணவியர்களின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படும். புதியதாக உதவித்தொகைக்கு விண்ணப்பிப்போர் அல்லது தங்களின் முந்தைய பதிவுகளை புதுப்பிப்போர் என அனைவரும் மத்திய அரசின் http://www.scholarship.gov.in/ என்ற இணைய தளம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பித்து கொள்ளலாம்.
அவ்வாறு இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க வரும் அக்டோபர் 31 ஆம் தேதியே இறுதி நாள் ஆகும். அதற்குள் சம்பத்தப்பட்ட கல்வி நிறுவனம் மூலமாக இனையதளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். இது குறித்து மேலும் விவரங்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின நல அலுவலரை தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.
இந்த பணிகளுக்கு மேலும் விவரங்களை அறிந்து கொள்ள மாவட்ட அளவில் என்றால் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அலுவலகத்தினை நாடலாம். மேலும் மாநில அளவில் என்றால் மாநில ஒருங்கிணைப்பாளர் அலுவலகத்தினையும் நாடலாம். அது குறித்த அரசின் அறிவிப்பினை கீழ் வழங்கியுள்ளோம்.
Scholarship Notice – Download
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்