10, 11 & 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைனில் பொதுத்தேர்வு – ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை!!

1
10, 11 & 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைனில் பொதுத்தேர்வு - ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை!!
10, 11 & 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைனில் பொதுத்தேர்வு - ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை!!
10, 11 & 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைனில் பொதுத்தேர்வு – ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக 9 மாதங்களாக பள்ளிகள் திறக்கப்படாத நிலையில், 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டில் ஆன்லைனில் பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என திருவண்ணாமலை மாவட்ட பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழகம் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.

பொதுத்தேர்வுகள்:

கொரோனா தொற்று அச்சத்தால் கடந்த மார்ச் 25ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. ஊரடங்கில் பின்னர் வழங்கப்பட்ட தளர்வுகளால் பல மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளன. தமிழகத்தில் அது குறித்து எவ்வித முடிவும் எடுக்கப்படாமல் உள்ளது. இதனால் மாணவர்கள் நேரடி வகுப்புகள் இல்லாமல் பொதுத்தேர்வுக்கு தயாராவதில் சிக்கல் நிலவுகிறது.

ஜனவரி 11 முதல் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் – மாநில அரசு அறிவிப்பு!!

மேலும் இந்த கல்வியாண்டில் பொதுத்தேர்வுகள் கண்டிப்பாக நடைபெறும் என அறிவித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என கூறியுள்ளார். அதுமட்டுமின்றி பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து இன்று முதல் ஜனவரி மாத இறுதி வரை கருத்து கேட்கப்படும் என தெரிவித்துள்ளார். இதற்கிடையில் திருவண்ணாமலை மாவட்ட பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழகம் சார்பாக தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.

9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் பள்ளிகள் திறப்பு!!

அதில், கொரோனா காரணமாக நடத்தப்பட்ட ஆன்லைன் வகுப்புகள் கிராமப்புற பள்ளி மாணவர்களை முழுமையாக சென்றடையவில்லை. இதனால் கல்லூரி மாணவர்களுக்கு நடத்தியதை போன்று, 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டில் ஆன்லைனில் பொதுத்தேர்வுகளை நடத்த வேண்டும் என கோரப்பட்டு உள்ளது.

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு – பெரியார், பரியேறும் பெருமாள் & கொரோனா வைரஸ் பற்றிய வினாக்கள்!!

நேரடியாக கணினியில் அல்லாமல், மாணவர்களுக்கு வினாத்தாள்களை வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வீட்டில் இருந்தபடியே விடைகளை தாள்களில் எழுதி அதனை பள்ளிகளில் ஒப்படைக்கும் முறையில் தேர்வுகளை நடத்தலாம் என பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!