NMMS தேர்ச்சி மாணவர்கள் உதவித்தொகை பெற புதுப்பிக்க வேண்டும் – பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு!!
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 8 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான உதவித்தொகை வழங்க NMMS தேர்வுகள் நடத்தப்படுகிறது. இந்நிலையில் இந்த தேர்வுகளில் தேர்ச்சி பெற்று இணையத்தில் பதிவு செய்யாத 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பட்டியல் தயார் செய்ய கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
NMMS தேர்வுகள்:
மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை சார்பில் தேசிய வருவாய் வழி மற்றும் படிப்புதவி திட்டத்தின் மூலம் பள்ளிகளில் 8 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வுகளில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு 12 ஆம் வகுப்பு வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த தேர்வு எழுத அங்கீகரிக்கப்பட்ட அரசு, மாநகராட்சி, நகராட்சி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
TN Job “FB Group” Join Now
இந்த தேர்வில் கலந்து கொள்ளும் மாணவர்கள் முழு ஆண்டு தேர்வில் 55% மதிப்பெண் மற்றும் பட்டியலின மாணவர்கள் 50% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். மேலும் 8 ஆம் வகுப்பில் NMMS தேர்ச்சி பெற்ற மாணவர்கள் 12 ஆம் வகுப்பு வரை உதவித்தொகை பெற புதுப்பிக்க வேண்டும். அப்போது தான் அவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும்.
இந்திய சைகை மொழி முறைப்படுத்த நடவடிக்கை – மத்திய பட்ஜெடில் அறிவிப்பு!!
சிலர் இதனை செய்ய மறந்து விடுகிறார்கள். எனவே NMMS தேர்வில் தேர்ச்சி பெற்று நடப்பு கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் பட்டியலை தயார் செய்து அவர்களது விவரங்களை மாவட்ட முதன்மை கல்வி வருகிற 15 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்