தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு – அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு!
1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பதற்கு தயார் நிலையில் உள்ளதா? என்பதை மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆய்வு செய்து அடுத்த வாரத்துக்குள் அறிக்கையாக அளிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
பள்ளிகள் திறப்பு:
தமிழகத்தில் தமிழகத்தில் 1 முதல் 8 வரையிலான வகுப்பு மாணவர்களின் கல்வி நிலையை கருத்தில் கொண்டு நவம்பர் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் ஆலோசனையில் ஈடுபட்டார். தொடக்க மற்றும் நடுநிலை கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் அனைத்து வகை பள்ளிகளிலும் முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டது.
தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு வரை காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் ரத்து – அமைச்சர் அறிவிப்பு!
ஓராண்டுக்கு மேலாக வீட்டில் இருந்து விட்டு வெகு நாட்களுக்கு பிறகு மீண்டும் பள்ளிக்கு வருவதால் அவர்களுக்கு கற்றலில் ஆர்வத்தை தூண்டி மன சோர்வை போக்கும் வகையில் தேவையான செயல்பாடுகளை மேற்கொள்ள பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. அந்த வகையில் தொடக்க நிலை மாணவர்களை உளவியல் ரீதியாக தயார்ப்படுத்த எழுத்து, கதை கூறுதல், ஓவியம் வரைதல் போன்ற செயல்பாடுகளை ஊக்குவிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அக்.22 முதல் தியேட்டர்கள் திறக்க அனுமதி – ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அறிவிப்பு!
அதனை தொடர்ந்து அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்கள் பள்ளிகள் திறப்பதற்கு தயார் நிலையில் இருக்கிறதா? என்பதை ஆய்வு செய்து அடுத்த வாரத்துக்குள் அதை அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்து தொடக்க கல்வி இயக்குனரகத்தில் இருந்து அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் விரிவான சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து திருப்பூர் மாவட்டத்தில் கல்வி அதிகாரிகள் பள்ளிகளில் ஆய்வு பணியை தொடங்கியுள்ளனர்.