தமிழகத்தில் 1 – 9 வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு – அரசுக்கு கோரிக்கை!

0
தமிழகத்தில் 1 - 9 வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு - அரசுக்கு கோரிக்கை!
தமிழகத்தில் 1 - 9 வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு - அரசுக்கு கோரிக்கை!
தமிழகத்தில் 1 – 9 வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு – அரசுக்கு கோரிக்கை!

தமிழகத்தில் இன்று முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா தொற்று முழுமையாக குறையாத நிலையில் 1 – 9 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தேவையில்லை என்று பாமக இளைஞர் அணித் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.

பள்ளிகள் திறப்பு:

தமிழகத்தில் கொரோனா தாக்கம் மீண்டும் வேகமெடுத்து காரணத்தால் அரசு தடுப்பு பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தடுப்பு நடவடிக்கையாக இரவு நேர ஊரடங்கு ஞாயிற்று கிழமைகளிலும் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக பள்ளி மாணவர்களுக்கு ஜனவரி 31ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டது. முதலில் 1 -9 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டது. 10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற உள்ளதால் அம் மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடைபெற்று வந்தது.

இரவு ஊரடங்கு ரத்து, 100% ஊழியர்களுடன் அலுவலகங்கள் இயங்க அனுமதி – மாநில அரசு அறிவிப்பு!

இந்த நிலையில் தொற்று அதிகரித்து வருவதால் 10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கும் விடுமுறை வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதனடிப்படையில் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. தற்போது கொரோனா பாதிப்புகள் குறைந்து வந்ததை அடுத்து அரசு இரவு நேர ஊரடங்கு மாற்றம் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு போன்றவைகளை ரத்து செய்தது. மேலும் பிப்ரவரி 1 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது அதன்படி இன்று முதல் தமிழகம் முழுவதும் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டள்ளது.

IPL அப்டேட்: பஞ்சாப் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுக்க திட்டமிடும் 14 வீரர்கள் – எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாக அரசு புள்ளிவிவரங்கள் தெரிவிக்கலாம். ஆனால் திரும்பிய திசையெல்லாம் கொரோனா பாதிப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. எனவே 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பை ஒத்திவைக்க வேண்டும். பெரும்பாலான மாநிலங்களில் இன்னும் பள்ளிகள் திறக்கப்படவில்லை. பெரும்பாலும் உயர்நிலை பள்ளிகள் மட்டும் தான் திறக்கப்பட்டுள்ளது என்று பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!