பள்ளிகள் திறப்பில் புதிய கட்டுப்பாடுகள் அமல், 50% மட்டுமே அனுமதி – கொரோனா பரவல் எதிரொலி!
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள பள்ளிகள் அனைத்தும் இன்று (நவ.29) முதல் 50% திறனில் மட்டுமே செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இது குறித்த புதிய வழிகாட்டுதல் விவரங்களும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
பள்ளிகள் திறப்பு
நாடு முழுவதும் தற்போது கொரோனா 3ம் அலைக்கான முன் எச்சரிப்புகள் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள பள்ளிகள் அனைத்தும் இன்று (நவ.29) முதல் 50% திறனுடன் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது புதிய கொரோனா மாறுபாட்டின் அச்சத்துடன் மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள பள்ளிகள் புதிய இயல்புக்கு திரும்பவும், ஆன்லைன் வகுப்புகளை தொடரவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் – சென்னை வானிலை மையம் அறிக்கை!
அந்த வகையில் முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் தலைமையில் நடைபெற்ற கொரோனா மறுஆய்வுக் கூட்டத்தில் இன்று (நவ.29) முதல் பள்ளிகளை 50% திறனுடன் மீண்டுமாக திறக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன் கீழ் 100% என்ற அளவில் இல்லாமல் 50% திறனுடன் மட்டுமே பள்ளிகளுக்கான இயக்கமும் முடிவு செய்யப்பட்டுள்ளது. என்றாலும் மத்திய பிரதேச பள்ளிகளுக்கு அரையாண்டுத் தேர்வுகள் திட்டமிட்டபடி தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் சம்பள உயர்வு – புத்தாண்டில் நற்செய்தி?
மேலும் தேர்வுகளில் எந்த மாற்றமும் இருக்காது என்றும் அதை நடத்துவதற்கான விரிவான உத்தரவுகள் வெளியிடப்பட்டு பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் 8, 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு 100% திறனுடன் பள்ளிகள் திறக்கப்பட்டு நடைபெற்று வந்தது. ஆனால் 1 முதல் 5 வரையுள்ள வகுப்புகள் உட்பட பெரும்பாலான வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டாலும், அதில் குறிப்பிடப்பட்ட மாணவர்களுக்கு மட்டுமே பள்ளிகள் முழு திறனில் இயங்கியது குறிப்பிடத்தக்கது.