அக்.27ம் தேதி 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பதற்கான இறுதி முடிவு – மாநில அரசு அறிவிப்பு!

0
அக்.27ம் தேதி 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பதற்கான இறுதி முடிவு - மாநில அரசு அறிவிப்பு!
அக்.27ம் தேதி 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பதற்கான இறுதி முடிவு - மாநில அரசு அறிவிப்பு!
அக்.27ம் தேதி 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பதற்கான இறுதி முடிவு – மாநில அரசு அறிவிப்பு!

டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் அக்டோபர் 27 ஆம் தேதி அன்று 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை தொடங்குவதற்கான இறுதி முடிவை எடுக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

பள்ளிகள் திறப்பு:

நாட்டின் தலைநகரான டெல்லியில் கோவிட் நிலைமை கட்டுப்பாட்டில் இருப்பதாகக் கூறி சத் பூஜை கொண்டாட்டங்களை அனுமதிக்க டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் அனுமதி அளித்தது. டெல்லியில் கடந்த ஆண்டு மார்ச் முதல் பள்ளிகள் செயல்படவில்லை. மேலும், இந்த ஆண்டு ஜனவரியில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது ஆனால் கோவிட் -19 இன் தீவிரமான இரண்டாவது அலை காரணமாக ஏப்ரல் மாதத்தில் மீண்டும் மூடப்பட்டன.

Jio பயனர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – 2 ரூபாயில் 365GB டேட்டா! தவறாமல் படிங்க!

புதிய கல்வியாண்டு தொடங்கப்பட்ட நிலையில், தொற்று பாதிப்பு குறைந்ததை அடுத்து செப்டம்பர் 1ம் தேதி முதல் 9 மற்றும் 11 க்கான உடல் வகுப்புகள் செயல்பட அனுமதிக்கப்பட்டன. ஆனால் ஆரம்பப் பிரிவு மற்றும் 6-8 வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை மீண்டும் திறக்க கோரி பெற்றோர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் குழு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் இல்லத்திற்கு முன்பு கடந்த மாதம் போராட்டம் நடத்தியது. ஆனால் செப்டம்பர் 29 அன்று, லெப்டினன்ட் கவர்னர் அனில் பைஜால் 6 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு பண்டிகை காலம் முடிந்த பிறகு பள்ளிகள் திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்று கூறினார்.

பொதுமக்கள் அதிகமாக நம்புவது இவர்களை தான் – கருத்து கணிப்பு முடிவுகள் வெளியீடு!

அதேநேரம், ஜூனியர் வகுப்புகளுக்கான பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்த எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் கூறினார். இந்நிலையில், டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் அக்டோபர் 27 ஆம் தேதி 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிகள் மீண்டும் திறப்பது குறித்து ஆலோசனை செய்யப்படும் என்றும், இறுதி முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பல தனியார் பள்ளிகளும் பள்ளிகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!