அக்.27ம் தேதி 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பதற்கான இறுதி முடிவு – மாநில அரசு அறிவிப்பு!
டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் அக்டோபர் 27 ஆம் தேதி அன்று 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை தொடங்குவதற்கான இறுதி முடிவை எடுக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
பள்ளிகள் திறப்பு:
நாட்டின் தலைநகரான டெல்லியில் கோவிட் நிலைமை கட்டுப்பாட்டில் இருப்பதாகக் கூறி சத் பூஜை கொண்டாட்டங்களை அனுமதிக்க டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் அனுமதி அளித்தது. டெல்லியில் கடந்த ஆண்டு மார்ச் முதல் பள்ளிகள் செயல்படவில்லை. மேலும், இந்த ஆண்டு ஜனவரியில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது ஆனால் கோவிட் -19 இன் தீவிரமான இரண்டாவது அலை காரணமாக ஏப்ரல் மாதத்தில் மீண்டும் மூடப்பட்டன.
Jio பயனர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – 2 ரூபாயில் 365GB டேட்டா! தவறாமல் படிங்க!
புதிய கல்வியாண்டு தொடங்கப்பட்ட நிலையில், தொற்று பாதிப்பு குறைந்ததை அடுத்து செப்டம்பர் 1ம் தேதி முதல் 9 மற்றும் 11 க்கான உடல் வகுப்புகள் செயல்பட அனுமதிக்கப்பட்டன. ஆனால் ஆரம்பப் பிரிவு மற்றும் 6-8 வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை மீண்டும் திறக்க கோரி பெற்றோர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் குழு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் இல்லத்திற்கு முன்பு கடந்த மாதம் போராட்டம் நடத்தியது. ஆனால் செப்டம்பர் 29 அன்று, லெப்டினன்ட் கவர்னர் அனில் பைஜால் 6 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு பண்டிகை காலம் முடிந்த பிறகு பள்ளிகள் திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்று கூறினார்.
பொதுமக்கள் அதிகமாக நம்புவது இவர்களை தான் – கருத்து கணிப்பு முடிவுகள் வெளியீடு!
அதேநேரம், ஜூனியர் வகுப்புகளுக்கான பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்த எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் கூறினார். இந்நிலையில், டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் அக்டோபர் 27 ஆம் தேதி 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிகள் மீண்டும் திறப்பது குறித்து ஆலோசனை செய்யப்படும் என்றும், இறுதி முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பல தனியார் பள்ளிகளும் பள்ளிகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.