செப்.6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு – வழிகாட்டுதல்கள் வெளியீடு!
கொரோனா நோய்த்தொற்று பரவல் நிலவரத்தை கருத்தில் கொண்டு அசாம் மாநிலத்தில் செப்டம்பர் 6ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
கல்வி நிறுவனங்கள் திறப்பு:
நாடு முழுவதும் கொரோனா 2வது அலையை தடுக்கும் நோக்கில் மாநில அரசுகள் சார்பில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டன. இதில் பாதிப்பு நிலவரத்துக்கு ஏற்ப படிப்படியாக தளர்வுகள் வழங்கப்பட்டு மெல்ல இயல்பு நிலை திரும்பியுள்ளது. இதனையடுத்து பள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்து மாநில அரசுகளே தன்னிச்சையாக முடிவு செய்து கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்தது. எனவே பல்வேறு மாநில அரசுகள் பள்ளி, கல்லூரிகள் திறப்பு குறித்து அறிவிப்பு வெளியிட்டு வருகின்றன. தற்போது அசாம் மாநில அரசு செப்.6 முதல் கல்வி நிறுவனங்களை திறக்க அனுமதி அளித்துள்ளது.
தமிழக அரசு வேலைவாய்ப்பை புதுப்பிக்க தவறியவர்களுக்கு கால அவகாசம் – கோரிக்கை!
இருப்பினும், தடுப்பூசி செலுத்தும் பணிகளுக்காக மட்டுமே பள்ளிகள் செப்டம்பர் 1 முதல் 3ம் தேதி வரை முதல் மூன்று நாட்களுக்கு மீண்டும் திறக்க அனுமதிக்கப்படுகின்றன. முதுகலை, பட்டதாரி மற்றும் மேல்நிலை மாணவர்கள் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியை எடுத்துக் கொண்டால் மட்டுமே நேரடி வகுப்புகளுக்கு அனுமதிக்கப்படுவார்கள். மேலும் ஒரு பிரிவில் 30 க்கும் மேற்பட்ட மாணவர்கள் இருக்கக் கூடாது.
- பிஜி, யுஜி மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான நேரடி வகுப்புகள் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தி இருக்கும் மாணவர்களுக்கு அனுமதிக்கப்படும்.
- 18 வயதுக்கு கீழ் உள்ள 12 ஆம் வகுப்பு மாணவர்கள் மட்டும் தடுப்பூசி போடப்படாவிட்டால், நேரடி வகுப்புகளுக்கு அனுமதிக்கப்பட வேண்டும்.
TN Job “FB Group” Join Now
- பள்ளி மற்றும் கல்லூரிகள் வளாகத்தின் அட்டவணையுடன் ஆன்லைன் வகுப்புகளைத் தொடருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.
- முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பிஜி, யுஜி மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே விடுதிகள் மீண்டும் திறக்க அனுமதிக்கப்படுகின்றன.
- நர்சிங் படிப்புகள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான நேரடி வகுப்புகள் செப்டம்பர் 6, 2021 முதல் தடுப்பூசி போடப்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மட்டுமே தொடங்கும்.