மார்ச் 1 முதல் 6-12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் மீண்டும் திறப்பு – மாவட்ட நிர்வாகம் அனுமதி!
லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள கார்கில் நகரத்தில் மார்ச் 1ம் தேதி முதல் 6 லிருந்து 12 வரையுள்ள வகுப்புகளுக்கு பள்ளிகள் மீண்டுமாக திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.
பள்ளிகள் திறப்பு
நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்றின் 3ம் அலைப்பரவல் குறைந்து வருவதை முன்னிட்டு, அனைத்து வகுப்புகளுக்கான பள்ளிகளையும் மீண்டும் திறக்க லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள கார்கில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அந்த வகையில் கார்கில் நகரம் முழுவதும் மார்ச் 1ம் தேதி முதல் 6 லிருந்து 12 வரையுள்ள வகுப்புகளுக்கு நேரடி பள்ளிகள் துவங்க இருக்கிறது. இது தொடர்பாக துணை கமிஷனர் சந்தோஷ் சுகதேவா பிறப்பித்த உத்தரவின்படி, மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் குளிர்கால விடுமுறைக்கு பின் மார்ச் 1 முதல் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை திறக்கப்படும்.
Post Office ல் சேமிப்பு கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – IVR வசதி!
அதாவது, கார்கில் மாவட்டம் முழுவதும் உள்ள தற்போதைய நோய் தொற்று நிலைமை குறித்த விரிவான ஆய்வுக் கூட்டத்தை மேற்கொண்ட நிர்வாகம் இந்த முடிவை எடுத்துள்ளது. அந்த வகையில் மார்ச் 1 முதல் கார்கில் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க உள்ளது. இருப்பினும், கிராமக் கல்விக் குழு உறுப்பினர்களுடன் ஒருங்கிணைந்து தேவையான ஏற்பாடுகளைச் செய்வதற்காக, பள்ளிகள் திறக்கப்படும் தேதிக்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக ஆசிரியர்கள் அனைவரும் அந்தந்த பள்ளிகளில் ஆஜராகுமாறு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கால அட்டவணை – இன்று மாலை அறிவிப்பு!
அந்த வகையில் கொரோனா தொடர்பான அனைத்து வழிகாட்டுதல் நெறிமுறைகளையும் பின்பற்றி மாணவர்கள் தங்கள் வீட்டிலும், பள்ளிகளிலும் இருக்கிறார்கள் என்பதை பள்ளிகளின் தலைவர்கள் மற்றும் ஊழியர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், கொரோனா அறிகுறிகளை கொண்ட எந்த மாணவர்களையும் பள்ளிக்குச் செல்ல அனுமதிக்க வேண்டாம் என்றும் பள்ளிகள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தூய்மை மற்றும் சுகாதார நிலைகளை தொடர்ந்து பராமரித்தல் மற்றும் கண்காணிப்பதை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.