டிச.23ம் தேதி முதல் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – ஜன.7 மீண்டும் வகுப்புகள் துவக்கம்!
பஞ்சாப் மாநிலத்தில் செயல்பட்டு வரும் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் டிசம்பர் 23ம் தேதி முதல் ஜனவரி 6ம் தேதி வரை குளிர்கால விடுமுறையை அறிவித்து அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.
பள்ளி விடுமுறை
நாடு முழுவதும் கொரோனா 2ம் அலைத்தொற்று குறைந்த பின்னர் பஞ்சாப் மாநில அரசு கடந்த ஜூலை மாதம் முதல் படிப்படியாக அனைத்து வகுப்புகளுக்குமான பள்ளிகளை மீண்டும் திறந்து வருகிறது. அந்த வகையில் முறையான கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி ஆகஸ்ட் மாதம் முதல் முழுமையான வகையில் பள்ளிகள் திறக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் வழக்கமான குளிர்கால பண்டிகையை முன்னிட்டு பஞ்சாப் மாநில பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
TNPSC குரூப் 4 VAO தேர்வர்கள் கவனத்திற்கு – கல்வித்தகுதி, வயது வரம்பு & பதவிகள்! முழு விபரம் இதோ!
இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பஞ்சாப் மாநில பள்ளி கல்வித்துறை அமைச்சர், பஞ்சாபில் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளும் டிசம்பர் 23 முதல் ஜனவரி 6 வரை குளிர்கால விடுமுறையை அனுமதிக்கும் என்று குறிப்பிட்டிருந்தார். அந்த வகையில் பஞ்சாப் மாகாணம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு டிசம்பர் 23ம் தேதி முதல் குளிர்கால விடுமுறை துவங்கும்.
அரசு ஊழியர்களுக்கு டிசம்பர் மாத ஊதியம் – மாநில அரசு வெளியிட்ட ஹாப்பி நியூஸ்!
தொடர்ந்து அனைத்து பள்ளி மாணவர்களுக்கான வகுப்புகள் ஜன.7 முதல் துவங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது பஞ்சாப் உயர் கல்வித் துறையால் (HED) அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கான குளிர்கால விடுமுறை குறித்த அறிவிப்புகள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை. இருப்பினும், உயர்கல்வி நிறுவனங்களில் குளிர்கால விடுமுறை டிசம்பர் 26 முதல் தொடங்கும் என்று சம்பந்தப்பட்ட துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.