தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் விடுமுறை – பெற்றோர்கள் கோரிக்கை!
தமிழகத்தில் 1 – 8 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை மூட வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
பள்ளிகள் மூடல்:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் குறைந்த பிறகு கடந்த 2021 செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் வெகு நாட்களுக்கு பிறகு மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வந்தது. 10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு நடத்தப்பட்டு. அரையாண்டு விடுமுறையும் அளிக்கப்பட்டது. இந்த நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து உருமாற்றம் அடைந்த ஓமிக்ரான் வைரஸ் வேகமெடுக்க தொடங்கியது. அதனால் மாணவர்களின் நலன் கருதி ஜனவரி 31ம் தேதி வரை மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
தமிழகத்தில் 4 நாட்களுக்கு மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
இந்த நிலையில் அரசின் முயற்சியால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சரிய தொடங்கியதால் பள்ளிகளை மீண்டும் திறக்க அரசு அனுமதி அளித்தது. பொதுத்தேர்வுகள் நடப்பு கல்வியாண்டில் கட்டாயம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்வு நடைபெற இன்னும் 2 மாதங்களே உள்ளன. அதனால் 10,12ம் வகுப்புகளுக்கு விரைந்து பாடங்களை நடத்த ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை மூட வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
EPFO பயனர்கள் கவனத்திற்கு – ஆயுள் சான்றிதழின் செல்லுபடியாகும் தன்மை, காலக்கெடு பற்றிய விவரங்கள்!
இது குறித்து அவர்கள் கூறுகையில் மாணவர்களின் நலன் கருதி பள்ளிகள் திறக்கப்பட்டாலும் நடப்பு கல்வி ஆண்டு முடிய இன்னும் இரண்டு மாதங்களே உள்ளன. ஏப்ரல் மாதத்திற்கு பிறகு கோடை விடுமுறை விடப்படும். அதனால் தற்போதைய நிலையில் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்படுவது சந்தேகமே என்பதால் 1 – 8 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை மூட வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.