பள்ளிகள் திறக்க அனுமதி !!!

0
பள்ளிகள் திறக்க அனுமதி !!!
பள்ளிகள் திறக்க அனுமதி !!!

பள்ளிகள் திறக்க அனுமதி !!!

ஒடிசாவில் பள்ளிகளை திறக்க அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி வரும் நவ.16ம் தேதி 9 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் பள்ளி செல்லலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

கொரோனா காரணமாக பள்ளிகளின் நிலை :

கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டுக்கிடந்தது. இதனால் பள்ளி, கல்லூரிக்கு மாணவர்களால் செல்ல முடியவில்லை. எனவே பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக பாடம் நடத்தப்பட்டு வந்தது.மாணவர்களும் வீட்டில் இருந்தபடி தங்களது பாடங்களை ஆன்லைன் வாயிலாக பயின்று வந்தனர். இந்நிலையில் கொரானா ஓரளவு குறைந்து வருவதால் படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள் பிறப்பிக்கப்பட்டதால் பள்ளிகள் திறப்பு எப்போது என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் தமிழகத்தில் தற்போது பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என்று அமைச்சர் தெரிவித்தார். ஆனால் ஆந்திர மாநிலத்தில் பள்ளிகள் நவம்பர் முதல் திறக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் அறிவித்தார்.

ஒடிசாவில் பள்ளிகள் திறப்பு :

இப்போதும் ஒடிசாவில் வரும் நவ.16ம் தேதி 9 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் பள்ளி செல்லலாம் என்று ஒடிசா மாநில அரசு தற்போது அறிவித்துள்ளது. இதைப்போல, கல்லூரிகளும் “லேப்’ (ஆய்வகம்) உதவியுடன் படிக்கும் முதுகலை பட்டப்படிப்பு, ஆராய்ச்சி படிப்பு படிக்கும் மாணவர்கள் மட்டும் கல்லூரி, பல்கலைக்கு வரலாம். கோவில், சர்ச், மசூதிகளில் பக்தர்களை அனுமதிப்பது குறித்து மாவட்ட நிர்வாகம் முடிவு எடுத்துக் கொள்ளலாம். திரை அரங்கு, நீச்சல் குளம் நவ.16 வரை மூடப்பட்டிருக்கும்.

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!