தமிழகத்தின் இம்மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பில் மாற்றம் – கல்வித்துறை விளக்கம்!
தமிழக பள்ளிக்கல்வித்துறை கோடை விடுமுறைக்கு பின்னர் ஜூன் 13ம் தேதி முதல் புதிய கல்வி ஆண்டில் பள்ளிகள் திறக்கப்படும் என்று முன்னதாக தெரிவித்திருந்தது. இந்நிலையில், தமிழக மாவட்டத்தில் பள்ளிகள் திறக்கப்படும் தேதியில் மாற்றம் இருப்பதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
பள்ளிகள் திறப்பு:
தமிழக அரசு கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது பள்ளிகள் வழக்கம் போல் செயல்பட வேண்டும் என்று அதிக ஆர்வம் காட்டி வருகிறது. கொரோனா கால கட்டுப்பாடுகள் காரணமாக மாணவர்களின் கற்றல் திறன் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது என்று கல்வி நிபுணர்கள் கூறியுள்ளது தான் இதற்கு காரணம். இந்நிலையில், 1 முதல் 10 ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 14ம் தேதி முதல் ஜூன் 12ம் தேதி வரை விடுமுறை என்றும், அதன்பிறகு ஜூன் 13ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு வழக்கம் போல் செயல்படும் என்றும் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பள்ளிகள் செயல்படும் நேரத்தில் மாற்றம் – கல்வித்துறை திடீர் விளக்கம்!
ஆனால் தற்போது தமிழகத்தின் பல மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிக வேகத்தில் பரவி வருகிறது. இதனால் பள்ளிகள் தீர்ப்பில் மாற்றம் இருக்குமா என்றும், புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படுமா என்றும் பல கேள்விகள் அரசிடம் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் முன்னதாக திட்டமிட்ட படி ஜூன் 13 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளிகள் திறக்கப்படுவதற்கு முன்பா பள்ளி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை பராமரிப்பு மற்றும் முன்னேற்பாடுகள் பற்றி உத்தரவிடப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
இதற்கான அறிவிப்பை தலைமை செயலாளர் வெ.இறையன்பு வெளியிட்டுள்ளார். ஆனால் சேலம் மாவட்டத்தில் மட்டும் சில பள்ளிகளில் எல்.கே.ஜி வகுப்புகள் இரண்டு நாட்கள் கழித்து ஜூன் 15ம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. மற்ற வகுப்புகள் அரசின் அறிவிப்பின் படி ஜூன் 13 திறக்கப்பட உள்ளது. அதிலும், தனியார் பள்ளிகளில் தான் இந்த தாமதம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள் நடத்தப்படுவது குறித்து வேறு வேறு பத்திகள் அளிக்கப்படுவது குறித்து, முறையாக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்ட பின்னர், இந்த வகுப்புகள் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.