தமிழகத்தில் பள்ளிகள் திறப்பிற்கு ஆயத்த பணிகள் மும்முரம் – கல்வித்துறை அதிரடி!
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளும் வரும் வாரத்தில் திறக்கப்பட உள்ளது. இதனால் அனைத்து பள்ளிகளிலும் ஆயத்த பணிகள் தீவிர நிலையில் நடந்து வருகிறது.
பள்ளிகள் திறப்பு:
தமிழகத்தில் கடந்த கல்வி ஆண்டின் இறுதி நாள் ஏப்ரல் 28ம் தேதி தான் என்றும், அதற்குள் அனைத்து வகுப்புகளுக்கான தேர்வுகளும் நடத்தி முடிக்கப்பட்டு விட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. இதன்பிறகு பொதுத்தேர்வு வகுப்பு மாணவர்களுக்கு கோடை காலத்தில் ஒரு சில பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டது.
இந்திய உணவுக் கழகத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிப்பது எப்படி?
கோடை விடுமுறையில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்ட பின்னர் அந்த வகுப்புகள் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், ஜூன் 12ம் தேதி முதல் 6 முதல் 12ம் வகுப்பு மற்றும் ஜூன் 14ம் தேதி முதல் 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இன்னும் ஒரு சில நாட்கள் மட்டுமே உள்ளதால் கரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மாநகராட்சி ஊழியர்கள் தூய்மை பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.