டிசம்பர் 15 வரை பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு – கொரோனா பரவல் எதிரொலி!
கொரோனா வைரஸின் புதிய மாறுபட்டு வகையான ஓமிக்ரானின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், புனே முனிசிபல் கார்ப்பரேஷன் 1 முதல் 7 ஆம் வகுப்புகளுக்கான பள்ளிகளை திறப்பதை டிசம்பர் 15 வரை ஒத்திவைத்துள்ளது.
பள்ளிகள் திறப்பு
உலகம் முழுவதும் தற்போது புதிய ஒமிக்ரான் கொரோனா தொற்று வகை அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ள நிலையில், மாநிலங்கள் தோறும் பள்ளிகளை திறக்கும் நடவடிக்கை தாமதப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மகாராஷ்டிரா மாநிலம் புனே முனிசிபல் கார்ப்பரேஷனில், 1 முதல் 7 ஆம் வகுப்புகளுக்கான பள்ளிகளை மீண்டும் திறப்பதை அந்நிர்வாகம் டிசம்பர் 15 ஆம் தேதி வரை ஒத்திவைத்துள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ உத்தரவின்படி, பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்த கூடுதல் முடிவுகள் பின்னர் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை IIT இல் மாதம் ரூ.1,01,500 சம்பளத்தில் வேலை – நேர்காணல் மட்டுமே! விண்ணப்பிக்க இறுதி நாள்!
அந்த வகையில் டிசம்பர் 15ம் தேதிக்கு பிறகு கொரோனா தொற்று நிலைமையை மறுபரிசீலனை செய்வதாக புனே மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னதாக, ஓமிக்ரான் அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு மும்பை நிர்வாகமும் பள்ளிகள் திறப்பதை டிசம்பர் 15 ஆம் தேதி வரை ஒத்திவைத்துள்ளது. அந்த வகையில் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செயல்படுத்தவும் சிறிது நேரம் தேவைப்படுவதால் டிசம்பர் 15 முதல் பள்ளிகளில் நேரடி வருகையை மீண்டும் துவங்க மும்பை அரசு முடிவு செய்துள்ளது.
திருமணத்திற்கு பின் சீரியலில் நடிக்க வரும் ‘பிக் பாஸ்’ சுஜா வருணி – ரசிகர்கள் உற்சாகம்!
மாணவர்கள் இனி ஆப்லைன் வகுப்புகளுக்கு செல்வதற்கு முன் பெற்றோரின் ஒப்புதல் கடிதங்களை பெற்றிருக்க வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் தங்கள் குழந்தைகளை ஆப்லைன் வகுப்புகளுக்கு அனுப்ப விரும்பாத மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போது மகாராஷ்டிரா அரசு 1 முதல் 7 ஆம் வகுப்புகளுக்கு இன்று (டிசம்பர் 1) முதல் பள்ளிகளை திறந்துள்ளது. இதற்கிடையில் பள்ளி நிர்வாகங்கள், முறையான வழிகாட்டுதல்களை பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.