டிசம்பர் 15 முதல் 1 – 7ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு | மாவட்ட நிர்வாகம் உத்தரவு!

0
டிசம்பர் 15 முதல் 1 - 7ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு | மாவட்ட நிர்வாகம் உத்தரவு!
டிசம்பர் 15 முதல் 1 - 7ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு | மாவட்ட நிர்வாகம் உத்தரவு!
டிசம்பர் 15 முதல் 1 – 7ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு | மாவட்ட நிர்வாகம் உத்தரவு!

மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை மாநகரில் வரும் டிசம்பர் 15ம் தேதி முதல் 1 லிருந்து 7ம் வகுப்புகளுக்கான பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்றும் எல்லா நேரங்களிலும் கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றுவது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகள் திறப்பு

நாடு முழுவதும் கொரோனா 2ம் அலைத்தொற்று ஓய்ந்திருக்கும் நிலையில் பல்வேறு மாநிலங்களில் பள்ளிகளை திறக்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மஹாராஷ்டிரா மாநிலத்தில் கிட்டத்தட்ட 27 வாரங்களாக மூடப்பட்டுள்ள பள்ளிகள் அனைத்தும் வரும் டிசம்பர் 15ம் தேதி முதல் மீண்டுமாக திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் வெளியிட்டுள்ள இறுதி மற்றும் முந்தைய உத்தரவுகளின்படி, மும்பையில் 1 முதல் 7 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் டிசம்பர் 15 முதல் மீண்டும் திறக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆதார் கார்டில் பெயர், முகவரி, மொபைல் எண் மொழி மாற்றம் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

முன்னதாக, மும்பை மாநகரில் டிசம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அம்மாநிலத்தில் ஒமிக்ரான் வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக டிசம்பர் 15 ஆம் தேதிக்கு பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்பட்டது. இப்போது பள்ளிகள் நடத்தப்படும் எல்லா நேரங்களிலும் கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றுவது கட்டாயம் என்று BMC அறிவித்துள்ளது. இது தொடர்பாக முக்கிய வழிகாட்டுதல் நடைமுறைகளை வெளியிட்டுள்ள மாவட்ட நிர்வாகம், பள்ளிகள் அனைத்தும் இந்த கட்டுப்பாடுகளை பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

அந்த வகையில் BMC வெளியிட்டுள்ள வழிகாட்டுதல் நெறிமுறைகள் 
  • மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து தங்களை தாங்களே பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.
  • எப்போதும் சானிடைசர்களை பயன்படுத்த வேண்டும்.
  • பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாதவர்கள் தடுப்பூசி போட வேண்டும்.
  • கொரோனா தொற்றுக்குரிய அறிகுறிகள் ஏதேனும் தென்பட்டால் அவர்கள் பள்ளிகளுக்கு வருவதில்லை.

மாநில அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – விரைவில் ஹாப்பி நியூஸ்!

  • மாணவர்களின் வருகை கட்டாயம் இல்லை.
  • ஆன்லைன் வகுப்புகளை தொடர விரும்புவோர் தொடரலாம்.
  • பள்ளிகள் சீரான இடைவெளியில் சரியான சுகாதாரத்தை உறுதி செய்ய வேண்டும்.
  • பொதுவான பகுதிகளில் யாரும் கூட்டமாக இருக்கக்கூடாது.
  • ஸ்டேஷனரி பொருட்கள், உணவு மற்றும் பிற பொருட்களை பகிர்வதைத் தவிர்க்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!