பள்ளிகளுக்கு மறுஉத்தரவு வரும் வரை விடுமுறை, ஆன்லைன் வழியில் வகுப்புகள் – கல்வித்துறை அறிவிப்பு!

0
பள்ளிகளுக்கு மறுஉத்தரவு வரும் வரை விடுமுறை, ஆன்லைன் வழியில் வகுப்புகள் - கல்வித்துறை அறிவிப்பு!
பள்ளிகளுக்கு மறுஉத்தரவு வரும் வரை விடுமுறை, ஆன்லைன் வழியில் வகுப்புகள் - கல்வித்துறை அறிவிப்பு!
பள்ளிகளுக்கு மறுஉத்தரவு வரும் வரை விடுமுறை, ஆன்லைன் வழியில் வகுப்புகள் – கல்வித்துறை அறிவிப்பு!

டெல்லியில் காற்று மாசுபாடு குறித்த பிரச்சனை அதிகரித்துள்ளதால் மறு உத்தரவு வரும் வரை அனைத்து அரசு மற்றும் தனியாா் பள்ளிகள் மூடப்படும் என கல்வித்துறை கூடுதல் இயக்குநா் ரீட்டா சா்மா கூறியுள்ளார்.

காற்று மாசுபாடு:

நாடு முழுவதும் கொரோனா தாக்கம் தீவிரமாக இருந்து வந்தது. இதன் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்தால் பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டது. தற்போது கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து வரும் நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தேசிய தலைநகரான டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரித்துள்ளது. டெல்லியில் நேற்று காலை 9 மணியளவில் காற்றின் தரக் குறியீடானது 382 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.

சபரிமலை தரிசனம் செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – இருவழிப்பாதையை திறக்க முடிவு!

எனவே காற்று தர மேலாண்மை ஆணையத்தின் மறு உத்தரவு வரும் வரை டெல்லி, என்சிஆர் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் உள்ள அனைத்து பள்ளிகளையும் உடனடியாக மூட சுற்றுச்சூழல் துறை உத்தரவிட்டுள்ளது. எனவே அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மூடப்படும் என கல்வித்துறை கூடுதல் இயக்குநர் ரீட்டா சர்மா கூறியுள்ளார். ஆனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வந்த பின்னர் பள்ளிகள் திறக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலை முதலாமாண்டு மாணவர்கள் கவனத்திற்கு – ஜனவரிக்கு பிறகு நேரடி வகுப்புகள்!

காற்று மாசுபாடு குறித்து டெல்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் அதிகாரிகளுடன் உயர்நிலை கூட்டம் நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்துவதற்காக டெல்லி அரசு சில வழிகாட்டுதல்களை விதித்திருந்தது. அந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடைந்த நிலையில் மறு ஆய்வு செய்வதற்கான கூட்டத்திற்கு அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார். இதில் சம்பந்தப்பட்ட அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய அறிவிப்பின்படி, மறு அறிவிப்பு வரும் வரை மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமே பாடங்கள் நடத்தப்படும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!