ஜூலை 18 & 19ம் தேதியன்று பள்ளிகளுக்கு விடுமுறை – இதற்காக தான்!
நாடு முழுவதும் நிலவும் கடுமையான வெப்ப அலை காரணமாக வரும் ஜூலை 18 மற்றும் 19ம் தேதிகளில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படும் என்று இங்கிலாந்து அரசு அறிவித்துள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.
பள்ளி விடுமுறை:
உலகளவில் மாறி வரும் பருவ காலநிலையானது மக்களின் அன்றாட வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் சமீபத்திய ஆண்டுகளாக மழை, வெப்பம், குளிர் போன்ற பருவநிலை மாற்றத்தால் மேற்கத்திய நாடுகள் பலவும் கடுமையான பாதிப்புகளை சந்தித்து கொண்டிருக்கிறது. இது போன்ற சூழலில் இங்கிலாந்து நாட்டில் தற்போது நிலவும் கடுமையான வெப்பம் காரணமாக பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் பாதிப்புகளை சந்தித்து வருவதாக தகவல்கள் பெறப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
அந்த வகையில் தற்போது அந்நாடு முழுவதும் தீவிரமடைந்து வரும் வெப்ப கால நிலையை கருத்தில் கொண்டு சிவப்பு எச்சரிக்கையை வானிலை அலுவலகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, அந்நாட்டில் 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கக்கூடும் என்றும் இந்த வெப்பக்காற்று சூறாவளியை ஏற்படுத்தக்கூடும் என்றும் வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். இந்த இக்கட்டான நிலையில் கடுமையான வெப்பநிலை காரணமாக அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் ஜூலை 18 மற்றும் 19ம் தேதிகளில் விடுமுறை அளிப்பது குறித்து இங்கிலாந்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.
தமிழக விமான நிலையங்களில் தீவிரப்படுத்தப்படும் பரிசோதனை – குரங்கு அம்மை பரவல் எதிரொலி!
இதற்கிடையில் குறிப்பிட்ட சில மாகாணங்களில் உள்ள பள்ளி நிர்வாகங்கள் ஏற்கனவே மாணவர்களுக்கு விடுமுறையை அறிவித்துள்ளன. அந்த வகையில் பக்கிங்ஹாம்ஷையரில் உள்ள டாக்டர் சாலோனர்ஸ் உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆலன் ரோ மாணவர்களின் பெற்றோருக்கு எழுதிய கடிதத்தில், ‘மோசமான வானிலை முன்னறிவிப்பு மற்றும் சிவப்பு வானிலை எச்சரிக்கை காரணமாக, ஜூலை 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் பள்ளியை மூட முடிவு செய்துள்ளோம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டு முழுவதும் மதியம் தோறும் பள்ளிகள் மூடப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.