தமிழகத்தில் பிப்ரவரி 18ம் தேதியன்று பள்ளிகளுக்கு விடுமுறை? விரைவில் அறிவிப்பு!
தமிழகத்தில் பிப்ரவரி 19ம் தேதியன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட இருக்கும் நிலையில், தேர்தலுக்கு முந்தைய நாளான 18ம் தேதியன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
பள்ளி விடுமுறை
கடந்த மாதம் முதல் தமிழகம் முழுவதும் அதிதீவிரமாக பரவி வந்த கொரோனா 3ம் அலைத்தொற்றால் ஒரு நாளைக்கு 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வந்தனர். இதனால் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி ஊரடங்கு கட்டுப்பாடுகளுடன் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இதன் மூலம் கொரோனா புதிய பாதிப்புகளின் எண்ணிக்கையில் சரிவை கண்ட மாநில அரசு ஊரடங்கில் இருந்து தளர்வுகளை அளித்து உத்தரவிட்டது.
மீண்டும் தீவிரமடையும் கொரோனா பரவல் – முழு ஊரடங்கு அமல்! அரசு அதிரடி உத்தரவு!
மேலும் ஓரிரு வாரங்களுக்கு மேல் மூடப்பட்டிருந்த கல்வி நிறுவனங்களும் பிப்ரவரி 1ம் தேதி முதல் மீண்டுமாக திறக்கப்பட்டன. இதற்கிடையில் தமிழகத்தில் வரும் பிப்ரவரி 19ம் தேதியன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதனால் வாக்கு பதிவு நடைபெறும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு மட்டும் 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுவதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் பிப்ரவரி 18ம் தேதியன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் பிப்.16ம் தேதியன்று அரசு பொது விடுமுறை அறிவிப்பு – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
அதாவது, இம்முறை பள்ளிகளில் அதிகளவு வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருப்பதால் தேர்தல் நடைபெறுவதற்கு முந்தைய நாளில் வாக்குச்சாவடிகள் அனைத்தும் காவல்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் வைக்கப்படும். அதனால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு, முந்தைய நாளான பிப்ரவரி 18ம் தேதியன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது தொடர்பான அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகலாம் என்று தகவல்கள் பெறப்பட்டுள்ளது.