பிப்ரவரி 27 வரை 1 முதல் 7ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் விடுமுறை – மாநில அரசு உத்தரவு!
கொரோனா 3ம் அலைப்பரவல் காரணமாக ஒடிசா மாநிலத்தில் மூடப்பட்ட பள்ளிகள் அனைத்தும் பிப்ரவரி 27ம் தேதி வரை திறக்கப்படாது என்றும், மாணவர்களுக்கான விடுமுறை நீட்டிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களையும் இப்பதிவில் காணலாம்.
பள்ளிகள் திறப்பு
நாடு முழுவதும் கொரோனா பேரலைத்தொற்று தீவிரமடைந்து வந்ததை கருத்தில் கொண்டு ஒடிசா மாநிலத்தில் உள்ள பள்ளிகள் அனைத்தும் கடந்த மாதம் முதல் மூடப்பட்டுள்ளது. இதற்கிடையில் சமீப காலமாக கொரோனா தினசரி பாதிப்புகளில் வீழ்ச்சியை சந்தித்து வந்த ஒடிசாவில் பிப்ரவரி 7ம் தேதியன்று 8 முதல் 12 வரையுள்ள வகுப்புகளுக்காக பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 1 முதல் 7ம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிகள் அனைத்தும் பிப்ரவரி 27 வரை திறக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து – அரசுக்கு கோரிக்கை!
இதற்கு முன்னதாக பிப்ரவரி 14 ஆம் தேதி அன்று 1 முதல் 7ம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிகளை மீண்டும் திறக்க அனுமதி அளித்திருந்த அரசாங்கம், அந்த அறிவிப்பை திரும்ப பெறுவதாக தெரிவித்துள்ளது. அதாவது பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான சுற்றுச்சூழலை உறுதி செய்ய வளாகங்களை சுத்தம் செய்தல், புதர் வெட்டுதல், பழுதுபார்ப்பு ஆகியவற்றுக்கு கூடுதல் அவகாசம் வழங்க கோரிய கலெக்டர்களின் அறிக்கைகளை மதிப்பிட்டு பள்ளி மற்றும் வெகுஜன கல்வித்துறை இந்த முடிவை எடுத்துள்ளது.
தமிழக அரசு கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி – உதயநிதி ஸ்டாலினை கேள்வி கேட்ட மக்கள்!
இது தவிர ஒடிசாவில் உள்ள பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் பலரும் தற்போது தேர்தல் தொடர்பான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், பள்ளி வளாகங்கள் வாக்குச் சாவடிகளாக பயன்படுத்தப்பட இருப்பதாகவும் அரசுக்கு சுட்டிக்காட்டியுள்ள நிலையில், பள்ளிகளை திறக்கும் நடவடிக்கை தாமதமாகி இருக்கிறது. இந்த அடிப்படையில், பிப்ரவரி 14 முதல் தொடங்க திட்டமிடப்பட்ட 1 முதல் 7ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் பிப்ரவரி 28 முதல் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதுவரைக்கும் மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.